districts

img

பொங்கலூரில் வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருப்பூர், மார்ச் 27 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெ ழுத்து பெறும் இயக்கத்தில் பொது மக்களிடம் கையெழுத்துப்  பெற்றனர். பொங்கலூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்வுக்கு இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமை வகித்தார்.  ஒன்றியச் செயலாளர் எம்.விஜய பிரபாகரன் வரவேற்றார்.இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர்  ஏ.வி.சிங்காரவேலன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலை வர் எஸ்.குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், பொங்கலூர் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.சத்யா  பாலசுப்பிரமணியம், வாலிபர் சங்க மாவட்டத் துணைச் செய லாளர் வி.பாலசுப்பிரமணி, ஊராட்சிமன்றத் துணைத் தலை வர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பவித்ராதேவி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.சம் பத், வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முரு கேஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்று கையெ ழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்து வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து பொங்கலூர் பகுதியில் நூற்றுக்கும்  மேற்பட்ட பொது மக்கள் போதைக்கு எதிராக கையெழுத் திட்டு வாலிபர் சங்க இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். நிறைவாக டி.சுபாஷ் நன்றி கூறினார்.