districts

img

கூடுதல் வைப்பு தொகை பிடித்தம் வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை

உடுமலை, ஜன.7- கூடுதல் வைப்பு தொகை பிடிப்பதாக கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை  அருகே குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட ஆமந்தகடவு ஊராட்சிக்கு உட்பட்டது அம்மா பட்டி. இங்கு செயல்பட்டு வரும் கே.2553 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக கூறி வியாழனன்று விவசாயிகள்  முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட் டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், விவசாய கடன் பெறும் விவசாயிகளிடம் 10 சதவிகிதம் வைப்புத் தொகை ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.  இச்சூழலில் தற்போது கடன் பெறும் விவசாயிகளிடம் சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச் சையாக  கூடுதலாக வைப்புத் தொகையை கட்டாயப் படுத்தி வாங்கி வருகின்றனர். இந்த கூடுதல் வைப்பு தொகைக்காக ரசீது அல்லது பாஸ் புக் உள்ளிட்ட ஏதுவும் வழங்குவதில்லை. மேலும் கடன் பெற்றவர்களிடம் 10 சதவிகித கமிஷன் கேட்கின்றனர். இதே போல் நகை கடன், பயிர்கடன் பெறும் விவசாயிகளிடம்  டாக்குமெண்ட் சார்ஜ்  என கூடுதல் கட்டணம் வசூலிக்கின்ற னர். எனவே, இந்த முறைகேடுகளை கூட்டுறவு சங்க பதிவா ளர் அல்லது மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.