திருப்பூர், நவ.14- மாநில அளவிலான குத்துச்சண்டை போட் டிக்குத் தேர்வாகியுள்ள வெள்ளக்கோவில் அரசுப் பள்ளி மாணவிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரி வித்து வருகின்றனர். வெள்ளக்கோவில் - கரூர் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வர்ஷினி (16). குத்துச் சண்டைப் போட்டியில் ஆர்வ முள்ள இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடை பெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றார். மாணவி வர்ஷினிக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.