நாமக்கல், ஜன.3- நாமக்கல்லில் தனியார் ஜவ்வரிசி ஆலையிலிருந்து கழிவுநீர், விளை நிலத் திற்குள் பாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், செல்லப்பம் பட்டி பகுதியில் அமுதவள்ளி என்ற பெய ரில் ஜவ்வரிசி ஆலை, கடந்த 20 ஆண்டு களாக இயங்கி வருகிறது. இந்த ஆலை யில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து பல்வேறு ரசாயனங்களை கொண்டு ஜவ்வரிசியை பிரித்தெடுத்து வருகின்ற னர். அவ்வாறு பிரித்தெடுத்த பின்னர் ரசாயனங்கள் கொண்ட கழிவுநீரை, அருகிலுள்ள நிலத்தில் சேகரித்து வந்த னர். இந்நிலையில், தேங்கியிருந்த கழிவுநீர் குட்டையின் கரை உடைந்து, வெள்ளியன்று அருகிலிருந்த விவசாய நிலங்களில் பாய்ந்தது. இதனால் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட் டுள்ள மரவள்ளிக்கிழங்கு, வெங்கா யம், கொத்தவரை, சோளம் போன்ற பயிர்கள் கழிவுநீரில் மூழ்கி வீணானது. மேலும், இந்த கழிவுநீர் அருகிலுள்ள விவசாய கிணற்றிலும் கலந்ததால், அப் பகுதி விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், பல ஆண்டு களாக இந்த ஜவ்வரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு தேங்கி நிற்கும் கழிவு நீரால் பல்வேறு உடல் உபாதைகள் மற் றும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. கழிவுநீர் குட்டை கரை உடைப்பு ஏற் படுவது தொடர் கதையாக உள்ளதால், பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையி னர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள் ளிட்ட அனைத்துத் துறைகளிலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஜவ்வரிசி ஆலையில் இருந்து வெளிவரும் கழிவு நீரை உடனடியாக லாரி மூலம் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.