மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு வனத்துறையினர் தீவிர விசாரணை ஈரோடு, மார்ச் 24- பெருந்துறை அருகே 7 மயில்கள் மர்மமான முறை யில் மயில்கள் இறந்து கிடந் தது குறித்து வனத்துறை யினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந் துறை சீனாபுரம் அருகே உள்ள தலையம்பாளையம் பகுதி யில் தினமும் ஏராளமான மயில்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தனியார் நிலத்தில் புத னன்று மயில்கள் இறந்து கிடந்தன. இதைபார்த்த பொது மக்கள் உடனே ஈரோடு வனத்துறைக்கு தகவல் அளித்த னர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 4 ஆண், 3 பெண் என மொத்தம் 7 மயில்கள் இறந்து கிடந்தன. இதன்பின்னர் மயில்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அருகே உள்ள வீரணம்பாளையம் கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.