ஈரோடு, ஜன.27- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயற் குழு உறுப்பினரும், முன்னாள் கோபி தாலுகா செயலாளருமான தோழர் சா.க.கண்ணப்பன் வெள்ளியன்று காலமானார். தோழர் சா.க.கண் ணப்பன் 1977 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். உக்கரம் கட்சி கிளை செயலாளராக,கோபி - சத்தி ஒன்றுபட்ட தாலுகா செயலாளராக, கட்சியின் முழு நேர ஊழியராக, கோபி தாலுகா செயலாளராக, மாவட்ட செயற் குழு உறுப்பினராக உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். சாதி ஆதிக்கவாதிகளின் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத் தவர் பல இயக்கங்களை முன்நின்று நடத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைபாடு கார ணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளி யன்று காலமானார். மறைந்த தோழர் சா.க.கண்ணப்ப னுக்கு மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் ச.க. அருள் உக்கரம் கிளை செயலாள ராக உள்ளார். தோழர் சா.க.கண்ணப்பனின் மறை வையறிந்து மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள், ஊழியர்கள் திரளானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத் தினர்.