திருப்பூர், நவ. 13- திருப்பூரில் செந்தொண்டர் பேரணி தயாரிப்பு பேரவை ஞாயிறன்று வெள்ளியங்காடு கிளைகள் சார்பில் சஷ்டி மகாலில் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு மாநகர செயலாளர் த.ஜெயபால், மாநகர குழு உறுப்பினர்கள் கோ.பொம்மு துரை, பி.பாலன், கிளை செயலாளர்கள் சந்திரசேகர், கதிரேசன், கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் ஞாயிறன்று ராயபுரம் பகுதி கிளைகள் சார்பில் மாதர் சங்க நகர நிர்வாகி மினி தலைமையில் பேரவை நடைபெற்றது. மாநகரச் செயலாளர் த.ஜெயபால், மாநகர குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், கிளை செய லாளர்கள் ஜாபர், லாரன்ஸ், பரிமளா உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்நிலையில், நவம்பர் 27ஆம் தேதி திருப்பூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செந்தொண்டர் அணி வகுப்பு நடைபெற இருப்பதை முன்னிட்டு கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் இளம் தொண்டர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.