districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40ஐயும் வெல்வோம்

 கோவை, மார்ச் 11- தேர்தலில் வெல்ல சாதி, மதக் கலவரத்தை உருவாக்குவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு, எந்த அச்ச உணர்வு மின்றி தமிழகம், பாண்டிச்சேரியில்  உள்ள 40க்கு 40 தொகுதிகளையும்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும் என்பதோடு, நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணி வெல்வதற்கான களப் பணியாற்ற வேண்டும் என திமுக  தொண்டர்களுக்கு திமுக தலை வரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். கோவை - சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்ட பத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடை பெற்றது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல் வேறு மாற்று கட்சியில் இருந்து  விலகியவர்கள் தாய் கழகத்தில்  இணைந்துள்ளனர். கிளுகிளுப் பைகாரன் போல ஏமாற்றி அழைத்து சென்றவர்கள், தாயைத்  தேடி வந்திருப்பது போல தாய் கழகத்தை தேடி வந்திருக்கின்றனர். உங்களை தாய் உள்ளத்தோடு வரவேற்கிறேன்.  இந்த நாட்டில் திமுகவை போல  வெற்றி பெற்ற கட்சி எதுவும்  இல்லை. தோற்ற கட்சியும் எதுவும்  கிடையாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாத இயக்கம் திமுக. மக்கள் அன்பை, ஆத ரவை பெற்று, 6 ஆவது முறையாக  எனது தலைமையில் ஆட்சி  அமைந்துள்ளது.  தேர்தல் நேரத் தில் அளித்த வாக்குறுதிகள் காப் பாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் போன்ற சொன்ன திட்டங்களை மட்டுமல்ல, அரசுப்பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000  ரூபாய் உதவித் தொகை வழங்கும்  புதுமை பெண் திட்டம் போன்ற  சொல்லாததையும் செய்து கொண் டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங் கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே நடந்த தேர் தலை விட அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றதற்கு, ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை தான் கார ணம். வருகின்ற நாடாளுமன்ற தேர் தலிலும், இதேபோன்ற வெற்றியை  நாம் பெற்றாக வேண்டும்.  திட்டங்கள் தொடர, சாதனை கள் மலர, ஆட்சி பீடுநடை போட  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்றே  களமிறங்கி வியூகங்கள் அமைத்து  பணியாற்ற வேண்டும். மதம், சாதி யைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்திட முயல்வார்கள். அதைப் பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்ற தேர்தல் பணியாற்ற  வேண்டும். 40 க்கு 40 தொகுதி களிலும் வெல்ல வேண்டும். மதச் சார்பற்ற கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்   உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் முயற்சியில் முழுமையாக ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். துணை நிற்க வேண்டும்” என்றார்.  முன்னதாக விழாவிற்கு தலை மையேற்ற மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், “நமது இலக்கு வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் என்பதை கவனத் தில் கொண்டு  செயல்பட வேண்டும்.  40 க்கு 40 தொகுதிகளிலும்  முதல மைச்சர் அறிவிக்கும் வேட்பாளர் கள் வெற்றி வாகை சூட அனை வரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.