districts

img

திருப்பூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஊழியர்கள் கூட்டம்

திருப்பூர், பிப்.8-  திருப்பூர் மாநகராட்சி 9 ஆவது மற்றும் 53 வது வார்டு களில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஊழியர்கள் கூட்டம்  நடைபெற்றது.   திருப்பூர் 9ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கா.வசந்திக்கு ஆதரவாக ஞாயி றன்று மாலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஊழி யர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின்  முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் கலந்து கொண்டு பேசினார். அதேபோல், திருப்பூர் மாநகராட்சி 53ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரா. மணிமேகலைக்கு ஆதரவாக ஞாயிறன்று மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் பங்கேற்று வேட்பாளர் ரா.மணிமேகலைக்கு ஆதரவு கோரி உரையாற்றினார்.