திருப்பூர், மார்ச் 20- திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் காஷ் மீரி பைல்ஸ் என்ற திரைப்படம் முடிந்த வுடன், படம் பார்த்த ரசிகர்களை எழுந்து நிற்க வைத்து உறுதிமொழி எடுக்க வைத்து ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பல் அட்டூழியம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரி பைல்ஸ் என்ற இந்தி திரைப் படம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு உண்மை வரலாற்றை அடிப்படை யாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி, உண்மையைத் திரித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காஷ்மீர் பண் டிட் சமூக மக்களை படுகொலை செய்து வெளியேற்றியதாக ஒட்டுமொத்த இஸ்லா மிய சமூகத்தினர் மீதும் மதவெறி வெறுப்பை விதைக்கும் வகையில் இப்படம் எடுக் கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பிரதமர் மோடி, அமித்ஷா முதல் அந்த அமைப் புகளின் முக்கிய நிர்வாகிகள் இப்படத்தை பற்றி சமூக வலைதளங்களிலும், ஊடகங் களிலும் பெருமளவு வெறிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரிச் சலுகை அளித்திருப்பதுடன், படம் பார்ப்பதற்கு மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்குவது உள்ளிட்ட சலுகைகளையும் பாஜக ஆட்சியாளர்கள் வழங்கி உள்ள னர். இந்த திரைப்படம் தற்போது, திருப்பூரி லும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த வெள்ளியன்று இரவு இப் படக் காட்சி முடிந்த பிறகு ரசிகர்கள் வெளியே வர தயாரானார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பல் அனைவரை யும் வெளியே போகாமல் எழுந்து நிற்கு மாறு சொல்லி தடுத்து நிறுத்தி, உறுதி மொழி எடுக்க வைத்துள்ளனர். ஒரு திரைப்படம் வெளிவந்தால் அப் படத்தைப் பார்ப்பதும் அதை குறித்து விமர் சனம் செய்வதும் வழக்கமான நடைமுறை. ஆனால் திரையரங்கிலேயே பல தரப் பான பார்வையாளர்கள், ரசிகர்கள் வந்தி ருக்கும் நிலையில் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து தங்கள் அமைப்பின் மதவெறி வெறுப்பு உறுதிமொழி எடுக்கச் செய்திருப் பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டு மல்ல, தங்கள் நிலையை பொது ரசிகர்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கும் செயலா கும். இது ஜனநாயக விரோத, எதேச்சதிகார மான நடவடிக்கையாகும். பொது அமைதி யையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக் கும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதா கும். இந்த காரியத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நிர்வாகம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கலை இலக்கிய அமைப்பினர் கூறியுள்ளனர்.