districts

img

தனியார் மருந்தகத்திற்கு சீல்

சேலம், செப்.16- தனியார் மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்ட பெண்ணிற்கு கருச் சிதைவு ஏற்பட்டதால், அந்த மருந்தகத் திற்கு மருத்துவத்துறையினர் சீல் வைத் தனர்.  சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் உமா மகேஸ்வரி என்பவர், சேம்பூர் கிராமத்தில் வசித்து வரும் கனக ராஜ் மனைவி பரிமளா (38) என்பவ ருக்கு, கரு சிதைவுக்கான மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்துள்ளனர். இதில், பரிமளா உடல் நலம் மோசமடைந்தால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த சேலம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கருமந்துறைக்கு சென்று, அந்த தனியார் மருந்தகத்தை ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காக முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து மருத்துவக்குழுவினர் கொடுத்த தகவலின் பெயரில், பெத்த நாயக்கன் பாளையம் வட்டாட்சியர் அன் புச்செழியன், தனியார் மருந்தகத்திற்கு சீல் வைத்தார். மேலும் மருத்துவத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;