சேலம், செப்.17- கோடைகாலம் போல் தற்போது சேலம் மாவட்டத்தில் சுட்டெரித்து வரும் வெப்பத்தால், பொதுமக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், நடப் பாண்டு பிப்ரவரி மாதத்தின் 3 ஆவது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதி கரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப் பாக, ஏப்ரல் மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய் ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல் வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வரு கிறது. சேலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத் தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. தற்போது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் வெயிலின் அள வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப்.1 ஆம் தேதி 94.7 டிகிரியும், 6 ஆம் தேதி 95.6 டிகிரியும், 11 ஆம் தேதி 92.5 டிகிரியும் பதிவான நிலையில், திங்க ளன்று 99.4 டிகிரியாக வெப்பநிலை அதி கரித்தது. கோடைகாலம் போல் சுட்டெ ரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிக ரித்து காணப்படுகிறது.