districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அறிவியல் இயக்க அரூர் கிளை மாநாடு

தருமபுரி, ஜன.1- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அரூர் கிளை மாநாட் டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு உடற்கல்வி ஆசிரியர் பழனி துரை தலைமை யில் நடைபெற்றது. கவிஞர் மு.பிரேம்குமார் வரவேற்றார். நூலகர் தீர்த்தகிரி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் எ.கொ. அம்பேத்கர், செந்தில், கவிஞர் ஆதிமுதல்வன் ஆகியோர் “சமூக மாற்றத்திற்கான அறிவியல்” என்ற தலைப்பில் கருத்து ரையாற்றினர். இம்மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்களிடையே அறிவியல் குறித்த கருத்தரங்குகள், விழிப்பு ணர்வு பிரசாரங்களை செய்தல், அறிவியல் மனப்பான்மை வளர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் அரூர் கிளைத் தலைவராக மூர்த்தி, செயலாளராக பழனித்துரை, பொருளாளராக பெரு. சுரேஷ், துணைத்தலைவராக கிருஷ்ணன், இணைச்செயலா ளராக கல்பனா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம், ஜன.1- சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன் றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. நீர்வளத்துறை சார்பில் பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப் படுகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, உள்ளூர் மட்டுமின்றி ஈரோடு, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட  வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமா னோர் மேட்டூர் பூங்காவிற்கு வந்தனர். மேலும், காவிரியாற் றில் விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பூங்காவில் உள்ள மீன்பண்ணை, மான், முயல், பாம்பு ஆகிய பண்ணை களை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்!

தருமபுரி, ஜன.1- மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண் டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள ஆலங் குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவி பாரதி (45). இவரு டைய மனைவி செல்வி. இவர்கள் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015 ஆம்  ஆண்டு கவி பாரதி ஊருக்கு வந்து விட்டார். செல்வி திருப்பூ ரில் தொடர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலை யில், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஊருக்கு வந்து கொண்டி ருந்த செல்வி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவரு டைய குடும்பத்தினர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகா ரளித்தனர். அதன்பேரில் நடைபெற்ற போலீசாரின் விசார ணையில் செல்வியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கவி பாரதி அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தி ருப்பதும், உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவிபாரதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் கவி பாரதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபரா தம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா தீர்ப்பளித்தார்.

சுற்றுலா வாகனங்களில் சோதனை

சேலம், ஜன.1- ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளும் போலீசார், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிறன்று காலை முதல் இருசக்கர வாகனங்கள், கார்களில் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காடு மலை அடிவாரத்தில் குவிக்கப் பட்டுள்ள போலீசார், ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்களை  நிறுத்தி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியும், வாகனங்களை சோதனை செய்தும் அனுப்பி வைக்கின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல் வோர் கட்டாயம் தலைக்கவசம், கார்களில் செல்வோர் சீட்  பெல்ட் அணிவதை உறுதி செய்கின்றனர். மலைப்பகுதியில் செல்லும் போது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு வாக னங்களை இயக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

தருமபுரியில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
சென்னை வாலிபர்கள் இருவர் கைது

தருமபுரி, ஜன.1- தேக்கம்பட்டி அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகளை கொள் ளையடித்துச் சென்ற சென்னையைச் சேர்ந்த  2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். தருமபுரி மாவட்டம், தேக்கம்பட்டி அருகே உள்ள சத்யா நகர், பொதுப்பணித்துறை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (43). இவர் இலக்கியம்பட்டியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். கடந்த டிச.20 ஆம் தேதி யன்று காலை அனைவரும் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். இவர்களது இளைய மகள் அபிஷா பள்ளிக்குச் சென்று தேர்வு முடிந்து, மதியம் வீட்டிற்கு வந்தார். அப்பொ ழுது வீட்டின் கதவை திறந்து பார்க்கும் போது,  வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு படுக்கை அறையில் இருந்த பீரோ திறக்கப் பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடி யாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் ஸ்டாலின் வீட்டிற்கு வந்து  பார்த்தார். அப்பொழுது பீரோவிலிருந்த 5 பவுன் சிலுவையில் கல் வைத்த டாலர், தங்க செயின், தங்க ஆரம், கம்மல், வளையல்கள், மோதிரம் சுமார் 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஸ்டாலின் புகாரளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் ரங்கசாமி வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய சென்னையைச் சேர்ந்த இயேசு (28), சிவா (27) ஆகிய இரு வரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி உள்ளிட்டவைகளை பறி முதல் செய்தனர். இதன்பின் இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர்.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

சேலம், ஜன.1- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக தமிழ்நாடு  உரிமைகள் திட்டத்தின் கீழ், சமூக தரவுகள் பதிவேற்றம், மாற் றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி சேலம் மாவட்டத்தில் டிச.4 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் இப்பணி நடைபெற்று வருகிறது. இதனை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை வைத்துள்ளவர்கள் மற்றும் இதுவரை அடை யாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங் களது இருப்பிடங்களுக்கு வருகை புரியும் கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரும் தங்களது முழு விபரங்களை எந்த தயக்கமுமின்றி வழங்க வேண்டும். மேலும், விபரங்க ளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகம், அறை  எண்.1ல் மாவட்ட ஆட்சியரகம் சேலம்-1 என்ற முகவரியி லும், தொலைபேசி எண்: 0427-2415242ல் தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தருமபுரி, ஜன.1- தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2 வாரங்களாக பனிமூட் டத்துடன், கடும் குளிர் வீசுகிறது. மாவட்டத்தில் சராசரி வெப்ப நிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச மாக 18 டிகிரியுமாக உள்ளது. காலை நேரத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல் கின்றனர். சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் பெரிதும் சிர மத்திற்கு ஆளாகின்றனர். கடுங்குளிர் வீசுவதால் தருமபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள பள்ளி, அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களில், அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந் துள்ளது. மாலையில் 5 மணிக்கு தொடங்கி பகல் 11 மணி  வரை பனிமூட்டம் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

தருமபுரி, ஜன.1- தருமபுரி மாவட்டம், அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட காட்டு எர்ரப்பட்டியைச் சேர்ந்தவர் தேவன் (27). கட்டட தொழி லாளியான இவர் கெட்டுப்பட்டி பெரிய ஏரி பகுதியில் உட லில் காயங்களோடு இறந்து கிடந்தார். இதையடுத்து தேவன் மரணம் குறித்து, தொப்பூர் காவல் துறையினர் 5 தனிப்படை கள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவருடன் சுற்றித்திரிந்த காட்டு எர்ரப்பட்டியைச் சேர்ந்த பிரபு (21), அனுமந்தபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் (24) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடராஜன் (எ) ஆதி (19) ஆகிய 3 பேரிடம் தொப்பூர் போலீசார் விசாரணை நடத் தினர். இதில், தேவன் கடந்த ஓராண்டுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடைய விலை உயர்ந்த செல்போனை திருடிச்சென்று, வெளியூருக்கு போனதாக கூறப்படுகிறது. இதனால் ஊருக்கு திரும்பி வந்த தேவனை, ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்ய திட்ட மிட்டுள்ளனர். இதனை இந்த 7 பேர் கொண்ட கும்பல் தேவனை மது அருந்துவதற்கு வருமாறு, பேசி அழைத்து, அவரை அடித்தே கொலை செய்து, ஏரியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து பிரபு, சுபாஷ், ஆதி ஆகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, தலை மறைவாக உள்ள 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கழிவுநீர் பிரச்சனை: தீர்வு காண வலியுறுத்தல்

திருப்பூர் ஜன.1- திருப்பூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் இடத்திற்கு செல்லும் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்துள்ளார். கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வாஷிங்டன் நகர் என்ற பகுதியில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான தனியார் நிலம் உள்ளது. கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு  உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இவரது நிலத்திற்கு கழிவுநீர் சென்று சேரும் வண்ணம் அமைந்துள்ளது. இப் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி முதல் அவர் தனிநபர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து வருவாய்த்துறை தனி துணைவட்டாட்சியர் பரமேஸ்வரன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் அதிகாரிகளிடம் கொண்டு சென்று இப்ப பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து வேலுச் சாமி உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் தமது நிலத் திற்கு கழிவு நீர் வரும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக் கும் நிலையில் அதிகாரிகள் சொன்னது போல் நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக வேலுச்சாமி அறிவித்துள்ளார்.

முளைப்பு திறன் இல்லாத விதை விற்பணையை தடுக்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.1- முளைப்பு திறன் இல்லாத விதைகளை உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் விற்பனை செய்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகு திகளில் கடந்த மாதம் பெய்த பருவமழையால் நிலத்தடி நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள  விவசாயிகள் பலர், சிறு தானியங்கள் மற்றும் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளனர். ஆனால், விளைநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட விதைகள் முளைக்காமல் உள்ளன. விதை வாங்கிய கடைகளில் விவசாயிகளுக்கு முறையான பதிலும் கிடைக்காமல் உள்ளதால், பாதி முளைத்த காடுகளை  அழிக்கும் வேலையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழை நல்ல முறை யில் பெய்த காரணத்தில் தனியாரிடம் நிலக்கடலை விதைகள் வாங்கி நடவு செய்து, இரண்டு வாரங்கள் ஆகியும் பாதிக்கும் மேற்பட்ட விதைகள் முளைக்காமல் உள்ளன. இதற்கான கார ணத்தை கேட்டால், “நாங்கள் உங்கள் நிலத்திற்கு வந்து ஆய்வு செய்கிறோம்” என்று சொல்கிறார்கள். ஆனால், தற் பொழுது வரை யாரும் வரவில்லை. பாதி முளைத்த நிலத்தில் எப்படி விவசாயம் செய்வது? எனவே, முறையான விதை  சான்று இல்லாமல் விதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் நஷ்டயீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர்.

லஞ்சம் கேட்கும் சார்பதிவாளர் மீது புகார்

உடுமலை, ஜன.1 திருப்பூர் மாவட்டம், உடுமலை, கச்சேரி வீதியில் வட்டாச்சியர் அலுவலக வளாகத் தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கிராமப் புறங்களில் இருந்துதான் அதிக பத்திரப்பதிவு மற்றும் வில்லங்க சான்றுகள் கேட்டு விண் ணப்பம் செய்வது வழக்கம். இதனிடையே உடுமலை பகுதியில் போலியான பத்திரங் கள் பதிவு செய்து உள்ளதாக பல புகார்கள் வந்தது. இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம் ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில் வரு வாய்த்துறைக்கு சொந்தமான ஜம்புக்கல் மலைப்பகுதியில் போலியான பத்திரப்பதிவு குறித்து வருவாய் கோட்டாச்சியர் பாதிக் கப்பட்ட நபர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இந்நிலையில், உடுமலை பத் திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யும் தொகைக்கு ஏற்ப சார்பதி வாளருக்கு பணம் தந்தால் மட்டுமே பதிவு செய்வதாக உடுமலை ஆவண எழுத்தாளர் சிவசங்கர் மாவட்ட பதிவாளருக்கு புகார் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தால் மட் டுமே பத்திரப்பதிவு செய்வதாகவும், இல்லை யெனில் பதிவு செய்ய மறுப்பதாக சார்பதி வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார். உடு மலை பகுதியில் விளைநிலங்கள் வீட்டுமனை களாக பிரிக்கப்பட்டு, பல முன்னணி நிறுவ னங்கள் நேரடியாக ரியல் எஸ்டேட் தொழிலில்  ஈடுபட்டு வருவதால், தினமும் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பில் நிலங்கள் இந்த அலு வலக்தில் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப் பிடத்தக்கது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காப்பகத்தில் விட கோரிக்கை

அவிநாசி, ஜன.1- திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட் சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அரை குறை ஆடையுடன் மனநலம் பாதிக்கப் பட்டவர் சுற்றித்திரிந்து வருகிறார். இவர் சாலையின் நடுவே தடுப்பு மையத்தில் அமர்ந்து கொண்டு, வாகனத்தில் செல்லும் நபர் மீது எச்சில் உமிழ்வது, ஆபாச வார்த் தைகளால் வசைபாடுவது போன்ற செயல்க ளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு  முன்பு ஆடையில்லாமல் புதிய பேருந்து  நிலையத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது, ஆடை உடுத்துவதற்கு சமூக அலுவலர்கள், காவல் துறையினர் முயற்சித்தனர். அப் போது, போலீசாரின் சட்டையைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து வட்டாட் சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மனு  அளித்ததைத்தொடர்ந்து, அவரை காப்பகத் தில் சேர்த்து சிகிச்சை பெற்றார். தற்போது மீண்டும் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டு  வருகிறார். எனவே, இவரை மீண்டும் காவல் துறை உதவியுடன் அரசு காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

உடுமலையில் இன்று மின்தடை

உடுமலை, ஜன.1- உடுமலை தாலூகா, கிளுவன்காட்டூர் துணை மின் நிலை யத்தில் உட்பட்ட பகுதிகளில் மின் பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் 2ஆம் தேதி செவ்வாயன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல் லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங் கம், அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி மற்றம் ஆலாம்பாளை யம் ஆகிய பகுதியில்  மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அய்யப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கோபி அருகே வாகன விபத்து

கோபி, ஜன.1- கோபிச்செட்டிபாளையம் நம்பியூர் அருகே பிக்கப்  வாகனம் மற்றும் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள் ளானது. கோபிசெட்டிபாளையத்திலிருந்து – கோவை நோக்கி பிக்கப் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை கோவைபுதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், இந்த  வாகனம் நம்பியூர் அருகே வந்தபோது, மேட்டுப்பாளை யத்திலிருந்து 40 பயணிகளுடன் வந்த தனியார் பேருந் துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந் தின் முன் பக்கம் மற்றும் பிக்கப் வேனின் முன்பக்கம் சேத மடைந்தது. மேலும், பிக்கப் வாகனத்தில் பயணம் செய்த வட மாநில இளைஞர்கள் நித்தீஷ் மற்றும் நவீன் ஆகியோருக்கு தலை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தில்  பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. விபத்தில் காயமடைந்த இரண்டு வடமாநில இளை ஞர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துத் துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறையி னர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகர் இன கிராமங்களில் கோலாகலம் 

உதகை, ஜன. 1- குந்தை சீமை, பொறங்காடு சீமைகளில் ஹெத்தை யம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  நீலகிரியில் வாழும் தொத நாடு, பொறங்காடு, மேற்கு நாடு, குந்தை சீமை உள்ளிட்ட நான்கு சீமைகளில் ஆண்டு  தோறும் ஹெத்தையம்மன் திருவிழா நடக்கிறது. கடந்த  ஒரு வாரமாக கோத்தகிரிக்கு உட்பட்ட பேர கணி, கூக்கல்  உள்ளிட பெரும்பாலான கிராமங்களில்  வெகு விமரி சையாக நடந்தது. ஞாயிறன்று குந்தை சீமை, மேற்கு நாடு  சீமைக்கு உட்பட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அந்தந்த கிராமங்களில் உள்ள ஹெத்தையம்மன் கோவில் களில் சிறப்பாக நடந்தது.  கோவில் முன்பு கலாச்சார பாரம் ்பரிய உடையில் ஆடல், பாடலுடன்  நிகழ்ச்சி நடந்தது.

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளர் மரணம்

ஈரோடு, ஜன. 1- ஈரோடு அருகே கோவிலுக்குச் சென்ற மாநகராட்சி தூய்மைப் பணியாளர் திடீ ரென மயங்கி விழுந்து மரணமடைந்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு, ஆலமரத்து வீதியைச் சேர்ந்த வர் மோகனசுந்தரம் (30). ஈரோடு மாந கராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். ஞாயிறன்று காலை  அரச்சலூர் அருகே இருக்கும் கோவிலுக் குச் செல்வதாகக் கூறி சென்றார். இந்நி லையில், கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மோகனசுந்தரம் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு, மோகனசுந்தரத்தை பரிசோதித்த  மருத்துவர்கள், அவர் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக கூறியுள்ள னர். இறந்த தூய்மைப் பணியாளருக்கு  ரம்யா என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். இதேபோன்று, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பிள்ளையார் கோவிலைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (27). இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூ ரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து  வந்த இவர், ஞாயிறன்று காலை தேநீர் அருந்தி விட்டு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி அருகிலிருந்தவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்ப வம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 52 சதவிகிதம் குற்றம் குறைவு

உதகை, ஜன.1- நீலகிரி மாவட்டத்தில் ‌கடந்த ஆண்டு 52 சதவிகிதம் குற்ற வழக் குகள் ‌குறைந்துள்ளது. இதில்‌ 97 சத விகித வழக்குகள்‌ கண்டுபிடிக்கப் பட்டு குற்றவாளிகள் ‌கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டனர். 2024ஆம் ஆண்டு 3020 விழிப்புணர்வு இயக்கங்கள் நடை பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌குற்ற வழக்குகள்‌ 2023 ஆண்டு 19% வழக்குகள் ‌குறை வாக பதிவாகியுள்ளன. 12 பாலியல்‌  குற்ற வழக்குகளுக்கு நீதிமன்றத் தில் ‌தண்டணை பெற்று தரப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு‌ அதிகபட்சமாக 48 வருட சிறை தண்டனை ஒரு வழக் கிலும்‌, மற்றொரு வழக்கில் ‌42  வருட சிறை தண்டனையும்‌ குற்ற வாளிகளுக்கு பெற்று தரப்பட் டுள்ளது. உடல் சார்ந்த குற்றங் கள் கடந்த ஆண்டு 46% வழக்கு கள் ‌குறைவாக பதிவு செய்யப்பட் டுள்ளது. அனைத்து வழக்குகளி லும்‌ எதிரிகளை கைது செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டனர். ‌உடல்‌சார்ந்த குற்றங்களுக் காக ஒரு வழக்கில 41 வருட சிறை தண்டனையும்‌, மற்றொரு வழக்கில் ‌17 வருட சிறை தண்ட னையும் குற்றவாளிகளுக்கு பெற்று  தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22  சதவீத வழக்குகள் ‌அதிகமாக பதி வாகியுள்ளது. சாலை விதிகளை மீறியதற்காக 2023 ஆண்டு 2,48,768 மோட்டார்‌ வாகன சட்ட வழக்குகள் ‌பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்‌, 1528 வழக்குகள்‌ குடி போதையில் ‌வாகனம் ‌ஓட்டியதற்காகவும்‌, 1712  வழக்குகள்‌ அதிவேகமாக இயக்கி யதற்காகவும்‌, 349 வழக்குகள்‌ அபாயகரமாக வாகனம் ஓட்டிய தற்காகவும்‌ பதிவு செய்யப்பட் டுள்ளன. மேலும், ரூ.19 கோடியே 26 லட்சம் 66 ஆயிரத்து 360 அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ‌2023ஆம் ‌ வருடம் ‌5 எதிரிகள் ‌குண்டர் ‌தடுப்பு  சட்டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர்‌. படகு இல்லத்தில் ‌சுற்றுலா பயணிகளுக்கு உதவிடும் ‌வகையில்‌  சுற்றுலா காவல்‌பிரிவு அமைக்கப் பட்டுள்ளது. குற்றங்களை தடுக் கவும் ‌முக்கிய இடங்களில் ‌மற்றும் ‌சந்திப்புகளில் ‌புதிதாக 100 நவீன கண்காணிப்பு கேமராக்கள் ‌பொருத் தப்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் ‌அறிமுகப்படுத் தப்பட்ட புதனன்று பொதுமக்கள் ‌குறை தீரக்கும் ‌நாள் ‌கூட்டம் ‌நீலகிரி காவல்‌ கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் ‌நடைபெற்று வரு கிறது. இந்த குறை தீர்ப்பு ௯ட்டத் தில் ‌பொது மக்களின்‌ பல்வேறு பிரச்சனைகள்‌ தொடர்பாக 996 மனுக் கள் ‌பெறப்பட்டு அவற்றில்‌ 980 மனுக் களின் ‌மீது உடனுக்குடன் ‌விசாரணை முடித்து நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இதன்‌மூலம்‌ பொதுமக்கள்‌பெரிதும்‌ பயனடைந் துள்ளனர்‌. காவல்‌துறை சார்பாக கிராம கண்காணிப்பு குழு ஏற்படுத் தப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ‌ஒரு காவலர்‌ நியமிக்கப்பட்டு குற்ற  தடுப்பு, பாலியல்‌ குற்றம்‌, பழங்குடி யின மக்கள்‌ மற்றும் ‌வன்கொடுமை தடுப்பு சட்டம்‌ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்ற னர்.

ஈரோடு: 19 காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம்

ஈரோடு, ஜன.1-  நாடாளுமன்றத் தேர்தல் மே மாதத்திற்கு முன்பே நடைபெற வாய்ப்புள்ள நிலையில், ஒரே மாவட்டத்தில் நீண்ட காலமாக பணி யாற்றிய காவல் ஆய்வாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த  வகையில், ஈரோடு மாவட்டத்தில் 19 காவல்  ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு தாலுகா காவல்  ஆய்வாளர் சோமசுந்தரம், திருப்பூர் மாவட் டம் காங்கயம் காவல் நிலையத்துக்கும், திருப்பூர் மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு  ஆய்வாளர் ரவி, ஈரோடு மாவட்டம் பங்க ளாபுதூர் காவல் நிலையத்துக்கும், திருப் பூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வா ளர் சித்ராதேவி, ஈரோடு சைபர் கிரைம்  பிரிவுக்கும், ஈரோடு மாவட்டம் மலையம்பா ளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காங்கயம் காவல் நிலைய ஆய்வா ளர் காமராஜ், ஈரோடு வடக்கு காவல் நிலை யத்துக்கும், திருப்பூர் மாவட்டம் தளி ஆய்வாளர் ராஜகண்ணன், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் காவல் நிலையத் துக்கும், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கோமதி, திருப்பூர் மாவட் டம் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய விஜயலட்சுமி, ஈரோடு மாவட்டம் கவுந்தப் பாடி காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இதுபோல் பங்களாபுதூர் காவல் ஆய்வாளர் வடிவேல்குமார், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஜெயசுதா, ஈரோடு வடக்கு  காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், அறச்சலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய முருகன் ஆகியோருக்கு மாற்றுப் பணி வழங் கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தன மரக்கட்டை கடத்திய மூவர் கைது

மே.பாளையம், ஜன.1- மேட்டுப்பாளையம் அருகே சந்தன மரக்கட்டை கடத்திய  மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பெத்திக் குட்டை, இரும்பறை பகுதியில் சந்தன கட்டை கடத்தப்படு வதாக வனச்சரகர் மனோஜூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனச்சரகர் மனோஜ் தலைமையிலான குழுவினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரனூர் அருகே  சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து  வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனச்சரக அலு வலகத்திற்கு அழைத்துச்சென்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், காரனூர் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, ஆலாங்குட்டை பகுதியைச் சேர்ந்த  ராமசாமி என்பதும், சட்டவிரோதமாக 2 கிலோ அளவிற்கு சந்தன மரக்கட்டைகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.  இதனையடுத்து அவர்களிடம் இருந்து சந்தன மரக்கட் டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், அவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபரா தம் விதிக்கப்பட்டது.

அழுகும் நிலையில் வெங்காயம்: வியாபாரிகள் கவலை

நாமக்கல், ஜன.1- நாமக்கல்லில் ஏற்பட்டுள்ள சீதோசன நிலை மாறுபாடு காரணமாக, வெங்காயம் அழுகும் நிலைக்கு செல்வதால், வியாபாரி கள் கவலையடைந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குளிர்ச்சி யான சீதோசன நிலை காணப்படுகிறது. தொடர்ந்து பகல் நேரத்திலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், முறை யான வெப்பம் இன்றி கடைகளில் வாங்கப் பட்டுள்ள வெங்காயங்கள் அழுகும் சூழ்நி லைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  வெங்காய வியாபாரிகள் கலக்கமடைந் துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறு கையில், நாங்கள் வியாபாரத்திற்காக அதிக அளவு வெங்காயங்களை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளோம். தற்போது குளிர்ந்த காற்று டன் சீதோசன நிலை மாறுபாடு ஏற்பட்டுள் ளதால், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள் ஈரப்பதம் அடைந்து எளிதில்  அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத னால், சிறிய வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை கிலோ 40 ரூபாய் முதல்  50 ரூபாய் வரை குறைந்துள்ளது என கவ லையுடன் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு

நாமக்கல், ஜன.1- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத் தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெற்று வருகின்றன. மேலும், சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் உள்ள, பழைய சாக்கடை கால்வாய் இடிக் கப்பட்டு, தற்போது நெடுஞ்சாலைத்துறை சார் பில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்ட மைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காவல் நிலைய சாலை உள்ள ஆவரங்காடு பகுதி ஊரின் மையப்பகுதியாக இருப்பதால், அதிகளவு வாகனங்கள் அவ் வழியே சென்று வருகின்றன. மேலும், திருச் செங்கோட்டிலிருந்து மாற்றுப்பாதையில் வரும் வாகனங்கள், ஆவரங்காடு பகுதியில்  இருந்து காவல் நிலையம் சாலை வழியாக ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களுக்கு சென்று வருகிறது. இதனிடையே காவல் நிலையம் அருகே உள்ள குறுகிய சாலையில், வாக னங்கள் எதிர்திசையில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு  வருகிறது. இதனை குறைக்கும் வகையில், சுபாஷ் நகர் வழியாக சென்று பள்ளிபாளை யம் காவிரி பாலம் அருகே உள்ள மாற்று வழி யில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மேலும், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் எப்போதும் போல காவல் நிலைய சாலையிலிருந்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக் குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

நாமக்கல், ஜன.1- எலச்சிபாளையம் அருகே விவசாய கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கிளாப்பாளையத்தைச் சேர்ந் தவர் சந்திரசேகரன் (60). இவர் ஞாயி றன்று அவரது வீட்டின் அருகில் உள்ள  தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள் ளார். அப்போது, சுமார் 70 வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் ஒன்று அவரது கிணற்றில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டனர். கிராம நிர்வாக  அதிகாரி வள்ளிபூரணி அளித்த புகாரின் பேரில், எலச்சிபாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்?  என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்பந்து வீரருக்கு உற்சாக வரவேற்பு

கோவை, ஜன.1- கோவை, வால்பாறை கக்கன் காலனியைச் சேர்ந்த சிறுவன் அபிலேஷ். இவர் நேபாளத்தில் நடைபெற்ற 10 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், தமி ழக அணிக்காக விளையாடி பெருமை சேர்த்தார். அதை சிறப்பிக்கும் விதமாக, சொந்த ஊர் திரும்பிய அபி லேஷுக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. வால்பாறை பழைய பஸ்  நிலையத்திலிருந்து காந்தி  சிலை ஸ்டான்மோர் சந்திப்பு  வரையிலும் மேளதாளத் துடன், அபிலேஷை ஊர்வல மாக அழைத்துச் சென்றனர்.