திருப்பூர், டிச.7- போக்குவரத்துக்கு லாயக் கற்ற முறையில் இருக்கும் சாலை களை செப்பனிடவும், அப்பகுதி யில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூளிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று திருப்பூர், நெருப்பெரிச்சல் தோட்டத்து பாளையம் சாலையில் மரக்கன்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி இரண் டாவது மண்டலத்திற்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் இருக்கும் சாலை களை செப்பனிடவும், அப்பகுதி யில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மரக்கன்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது. செவ்வாயன்று காலை நெருப்பெரிச்சல் தோட் டத்துபாளையம் சாலையில் அஸ்வதி கம்பெனி அருகில் தேங்கியிருந்த சேறும், சகதியு மான சாலையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மரக்கன்று கள் நட்டனர். இப்போராட்டத்திற்கு தோட் டத்துபாளையம் மாதர் கிளைச் செயலாளர் ஏ.மங்கலட்சுமி தலைமை வகித்தார்.
பல ஆண்டு காலமாக தோட்டத்து பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் வடி கால் வசதி இல்லாமல் சாலைக ளில் கழிவுநீர், மழைநீர் தேங்கி சாலை குண்டு, குழியுமாக, சேறும், சகதியுமாகவும் உள்ளது. இது போன்ற நிலைமைகளில் மார்க் சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்யும் ஏற்பாட்டை மட்டுமே மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் செய்து வரு கின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நகரில் நடை பெற்று வருகின்றன. அண்மை யில் மழை பெய்த சூழ்நிலையில் தோட்டத்துப் பாளையம் சாலை யில் நெடுஞ்சாலைத் துறையினர் அவசர கதியில் மண்ணைக் கொட் டினர். இதனால் தேங்கியிருந்த கழிவுநீருடன் கலந்து களிமண் சேறாக மாறிய சாலையில், 15க் கும் மேற்பட்டோர் இருசக்கர வாக னங்களில் சென்றபோது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். எனவே இப்பகுதியில் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் கழிவுநீர் வெளியேறி செல்ல நிரந்தர ஏற் பாடு செய்ய வேண்டும், அத்துடன் மோசமான நிலையில் உள்ள இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். பிஎன் ரோடு பூலுவ பட்டி சந்திப்பிலிருந்து வாவிபா ளையம் வரை குண்டும். குழியு மான சாலையை புதிய தார் சாலை யாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட குழு உறுப் பினர் ஆர்.மைதிலி, வடக்கு ஒன் றிய குழு உறுப்பினர் ஆ.சிகா மணி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இப்போராட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.பழ னிசாமி, வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர். காளியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், இளங்கோ, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன் உள் பட அப்பகுதி கட்சிகிளை உறுப்பி னர்கள், பெண்கள் உள்பட பெருந் திரளானோர் கலந்து கொண்ட னர். மேலும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், வடி கால் வசதி ஏற்படுத்தித் தராத மாநகராட்சியைக் கண்டித்து இரண்டாவது மண்டல அலுவ லகத்தை முற்றுகையிடுவதுடன், சாலையை சீரமைக்க நெடுஞ் சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத் தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிறைவாக ஒன்றிய குழு உறுப்பினர் பானு மதி நன்றி கூறினார்.