நாமக்கல் ஜீலை, 17- தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவை சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவரிடம் சிஐடியு சங்கத்தினர் வழங்கினர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சிக்குட் பட்ட பகுதியில் ஏராளமான தாற்காலிக தூய்மைப்பணியாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் தரப்படுவதில்லை. மேலும், பல ஆண்டுகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் இவர்களை நிரந்திரப்படுத்திட முன்னுரிமை வழங்க வேண் டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் சேந்தமங்க ளலம் பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்தனர். முன்னதாக சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவர் சித்தரா தனபாலனிடம் சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந. வேலுசாமி தலைமையில் மனு அளித்தனர். இதில், சிஐடியு சங்கத்தின் அழகிரி, செல்லதுரை, மாரியம்மாள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மனுக்களை பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.