திருப்பூர், டிச.29- திருப்பூர் மாநகராட்சியில் 1500 மாணவிகள் படிக்கும் என்.ஆர்.கே. புரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் கழிப்பறை பகுதியில் வெளிப் பகுதி வீதி கழிவுநீர் சாக்கடை திறந்த நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்ப டுத்தி வருகிறது. இதை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் வலியு றுத்தி உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறு வனம் ஒன்று திருப்பூரில் பெண்கள் பள்ளிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர முன் வந்தனர். அதன்படி இங்குள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், என்.ஆர்.கே.புரம் பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கும் தேவையான வசதிகள் செய்து தர அப்பள்ளி நிர்வா கத்தினர் கேட்டுக் கொண்டனர். இதை யடுத்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் உள்ளிட் டோர் இப்பள்ளிகளுக்கு வந்து பார் வையிட்டனர். இதில் என்.ஆர்.கே.புரம் பள்ளியில் தற்போது பெண்கள் கழிப் பறை உள்ள பகுதிக்கு மேலே மாடி பகுதியிலும் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று இப்பள்ளி நிர்வா கத்தினர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்படி அங்கு பார்வையிட வந்த போது, கழிப்பறைக்கு செல்லும் வழி யில் இரண்டு அடி அகலத்தில் ஒரு சாக்கடை, பள்ளியின் வெளிப்புறத் தில் உள்ள வீதிச் சாக்கடை, பள்ளியின் உள்புறமாகச் சென்று அடுத்த வீதி யில் உள்ள சாக்கடையுடன் இணைகி றது. சாக்கடை திறந்தநிலையில் இருப் பதால், துர்நாற்றம், கொசுத் தொல்லை என சுகாதாரக்கேட்டுடன் இருக்கிறது. இதே இடத்தில்தான் குடிநீர் குழாய் களும் இருக்கிறது. பள்ளிக்குள் குழந் தைகள் நடக்கும் ஓர் இடத்தில் சாக் கடைக்குள் விழாமல் இருக்க பெஞ்ச், டெஸ்க்குகளை அதன் மேல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த பள்ளி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம், பள்ளிக்குள் செல்லும் சாக்கடையை வேறு வழியில் கொண்டு செல்ல வேண்டும் அல்லது இந்த சாக்கடைக்குள் குழந்தைகள் விழாமல் இருக்க கான்கிரீட் மூடி போட்டு சாக்கடையை மூடிவைத்து சுகாதாரத்தைப் பேணவேண்டும் என்று மாணவிகள், இப்பகுதி பெற் றோர் மற்றும் அறிவியல் இயக்கத்தி னர் கோரியுள்ளனர்.