சேலம், அக் 28- அரியர் நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி திங்களன்று, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் உருக்காலையில் உள்ள 3 அலகுகளில் 600 தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய 39 மாத அரியர் நிலு வைத்தொகை இதுவரையில் வழங்கப் படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும், மேலும், 10 ஆம் அண்டு களுக்கு மேலாக நிலுவையில் உள்ள வீட்டு வாடகைப்படி, கூடுதல் இன்க்ரீ மண்ட், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பணிக்கொடை திட்டம், 2007 இல் இருந்து திருத்தப்படாத ஊக்க ஊதிய திட்டம், பணியிடை மற்றும் பணி மாறுதலுக்கு உட்பட்ட தொழிலாளர்க ளின் ஆணையினை ரத்து செய்வது, போனஸ் திட்டத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் திங்க ளன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக, சேலம் உருக்காலையில் சுமார் 1500 டன் உற் பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை செயில் நிர்வாகம் விரைந்து நிறை வேற்றவில்லை எனில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள் ளனர். இப்போராட்டத்தில், சிஐடியு பொதுச்செயலாளர்கள் கே.பி.சுரேஷ் குமார், தொமுச பி.சிவக்குமார், ஐஎன் டியுசி க.குமார், தொவிமு கே.ரவிச் சந்திரன், பிஎம்எஸ் பி.வீரமணி, பிடி எஸ் வெங்கடாஜலம், ஏடிபி திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்ன தாக போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே. தியாக ராஜன், மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.