districts

img

சேலம் ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

சேலம், ஆக.19- ரயில் பாதைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படாததால், சேலம் ஆட்சியர் அலுவலத்தி லுள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு ளது. சேலம் - கரூர் அகல ரயில் பாதைக்காக சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கடந்த 2002 ஆம் ஆண்டு, தனி நபர்களுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது.இந்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை ரயில்வே நிர்வா கம் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும் என நிலம் கொடுத்தவர்கள் சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2002 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறையாக இழப் பீடு வழங்க வேண்டும் என கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இழப்பீடுத் தொகையை வழங்காததால், ரயில் நிலையம் மற்றும் ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள கார்கள், கம்யூட்டர்கள், பெஞ்சுகள் உள்ளிட்ட தளவாடங்களை ‘ஜப்தி’ செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து ஜோசப் உட்பட ஐந்து அமினாக்கள் திங்களன்று காலை மாவட்டஆட்சியர் அலுவலகத்திலுள்ள வருவாய் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த அதி காரிகளிடம், முறையாக இழப்பீடு வழங்காததால் வருவாய் பிரிவில் உள்ள பொருள்களையும் ஜப்தி செய்ய போவதாக  கூறினர். அதற்கு அதிகாரிகள் அனுமதிக்காததால் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.