சேலம் புத்தகத் திருவிழா நிறைவு: ரூ.1.20 கோடிக்கு நூல்கள் விற்பனை
சேலம், டிச.10- சேலம் புத்தகத் திருவிழா திங்களன்று நிறைவடைந்த நிலையில், மொத்தம் ரூ.1.20 கோடிக்கு புத்தகங்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளன. சேலம் புத்தகத் திருவிழா, சேலம் மாநகராட்சித் திடலில் நவ.29 ஆம் தேதியன்று துவங்கியது. 11 நாட்கள் நடை பெற்ற இத்திருவிழா திங்களன்று நிறைவடைந்தது.
நாள்தோ றும் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலைநிகழ்ச்சிகள் மற் றும் கருத்துரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக வாசிப் பாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள் ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் நடைபெற்றது. புத் தகத் திருவிழாவின் நிறைவு நாளான திங்களன்று மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநகர காவல் ஆணையர் பிர வின் குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையர் ரஞ்ஜீத் சிங், கூடுதல் ஆட்சியர் லலித்ஆதித்ய நீலம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, நிர்வாக இயக்குநர் (பொ) வி.கே.பாண்டே உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், பங் கேற்ற வாசகர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடினர். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர் ஜீவானந்தம் “வண் ணம் பேசும் மொழி” என்ற தலைப்பில் கருத்துரை யாற்றினார்.
இதையடுத்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றி தழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரி வித்தார். 11 நாட்கள் நடைபெற்ற சேலம் புத்தகத் திருவிழா வில் மொத்தம் ரூ.1.20 கோடிக்கு 1,06,046 புத்தகங்கள் விற் பனையாகியுள்ளன. அதேபோன்று பள்ளி மாணவ, மாணவி யர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 1,30,282 நபர்கள் வருகைபுரிந்து பார் வையிட்டு பயன்பெற்றுள்ளனர்.
அணைகள் நிலவரம் (செவ்வாய்க்கிழமை)
பவானிசாகர் அணை
நீர்மட்டம் : 98.97/105அடி
நீர்வரத்து: 4239 கனஅடி
நீர்திறப்பு: 2300 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:140.25/160அடி
நீர்வரத்து:22.71கனஅடி
நீர்திறப்பு:403.14கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:67.94/72 அடி
நீர்வரத்து:619கனஅடி
நீர்திறப்பு:1087கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:111/120அடி
நீர்வரத்து:153கனஅடி
நீர்திறப்பு:544கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:46.69/60அடி
நீர்வரத்து:820கனஅடி
நீர்திறப்பு:748கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 88/90அடி
நீர்வரத்து:279கனஅடி
நீர்திறப்பு:486கனஅடி