நாமக்கல், அக். 14- மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்ட ராசிபுரம் புதுச்சத்தி ரம் பிரதேசக் குழு செயலாளராக எஸ்.பெரியசாமி தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் ராசிபுரம் புதுச்சத்திரம் பிர தேசக் குழுவின் இரண்டாவது மாநாடு குருசாமி பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியினை பி. பெரியசாமி ஏற்றி வைத்தார். பிரதேசக் குழு உறுப்பினர்கள் பி. ஜோதிமணி பி.பழனிச் சாமி தலைமை வகித்தனர். எஸ்..இராமலிங் கம் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி உரையாற்றினார். பிரதேசக் குழு செய லாளர் எஸ்.பெரியசாமி வேலை அறிக் கையை முன்வைத்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கணேச பாண்டியன் வாழ்த் துரை வழங்கினார். இதில், அணைப்பாளையம் ஊராட்சி கல்லு கடை மேடு பகுதி பட்டியலின மக்க ளுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு அக்.21 அன்று இராசிபுரம் வட்டாட்சி யர் அலுவலக முன்பு கால வரை யற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது. வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியபட்டி கிரா மத்தில் போயர் சமூக மக்க ளுக்கு மயான வசதி செய்து தர வேண்டும். ஏழூர் ஆரம்ப சுகா தார நிலையத்தில் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கண்ணூர்ப்பட்டி ஊராட்சியில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் 9 பேர் கொண்ட பிர தேசக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் செயலாளராக எஸ்.பெரியசாமி தேர்ந்தெடுக் கப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி உரையாற்றினார். முடிவில், வரவேற்பு குழு செயலாளர் ஜி விவேகானந்தர் நன்றி கூறி னார்.