districts

img

ரூ.20 லட்சம் மோசடி: பாஜக பெண் நிர்வாகி மீது புகார்

கள்ளக்குறிச்சி, பிப்.14 - ஆதார் அட்டையில் போலியான புகைப்படங்  களை பதிவு செய்து ரூ. 20 லட்சம் வரையில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார் பேட்டை, நாச்சியார் பேட்டை மேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆதார் அட்டை நகல்களில் போலியான புகை படங்களை பதிவு செய்து, தனியார் நிதி நிறு வனங்களில் ரூ. 20 லட்சம் வரையில் அதே கிராமத்தை சேர்ந்த பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி என்பவர் பணத்தை பெற்றுள்ளார்.   கடனை திருப்பி கட்டா மல் ஏமாற்றியதால் தற்போது அந்த நிதி நிறு வனத்தை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் மூலம் நாச்சியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், கிராமப் பெண்களும், 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வரும் பெண் தொழிலாளிகளும் அதிர்ச்சி யடைந்தனர். பிறகு, இது குறித்து சிவசக்தியிடம் கேட்டதற்கு தகுந்த பதில் தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உளுந்தூர்  பேட்டை டிஎஸ்பி பிரதீப்பை சந்தித்தனர். அப்போது, தங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் மனு அளித்துள்ளனர்.  புகாரை பெற்றுக் கொண்ட டிஎஸ்பி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் சிவசக்தி கடன்களைப் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆதார் அட்டையின் நகலில் புகைப் படங்களை ஒட்டி அதன் மூலம் தனியார் நிதி நிறுவனங்களில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்  பேட்டை பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.