தருமபுரி, ஆக.30- பாலக்கோடு அருகே சாலை விரி வாக்கத்திற்காக குடியிருப்புகள் அகற் றப்பட்ட நிலையில், வசதியான மாற்று இடம் வழங்க வேண்டும் என அருந்த திய மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கோவிலூரான் கொட்டாய் பகுதியில் அருந்ததியர் குடி யிருப்பு உள்ளது. இங்கு நான்கு, ஐந்து தலைமுறைகளாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு அதியமான்கோட்டையில் இருந்து ராயக் கோட்டை வழியாக செல்லும் இரு வழிச் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக் கம் செய்யும் பணி துவங்கியது. இப் பணிக்காக கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் உள்ள அருந்ததிய காலனி யில் குடியிருப்பவர்களை காலி செய்யு மாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கு மாற்று இட மாக வேப்பாலபள்ளம் என்னும் மலைப் பகுதியில் 30 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. மாற்று இடம் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால், அந்த இடத்தில் குடியேறவில்லை. இதனால் தங்களுக்கு இழப்பீடு அதிகமாக வழங்க கோரியும், வசதியான மாற்று இடம் வழங்க வேண்டும் என அருந்ததிய மக் கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர்.