கோவை, நவ.9- புளியங்கண்டி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் பழுத டைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டிதரக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற் றது. கோவை மாவட்டம், ஆனை மலை வட்டம் புளியங்கண்டி கிரா மத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் பழங் குடி மக்களுக்கு கட்டித்தரப்பட்ட வீடுகள் பழுதடைந்து இடிந்துவி ழும் நிலையில் உள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால், வீடு கள் எந்த நேரத்தில் இடிந்து விழுந்து உயிர் சேதத்தை ஏற்படுத்துமோ? எனும் அச்சத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த காலங்களில் பலமுறை அரசு நிர்வாகங்களிடம் கோரிக்கை மனு அளித்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தி யும், இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வியாழன்று வால்பாறையிலிருந்து பொள் ்ளாச்சி செல்லும் சாலையில் மேற் கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைமை யில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர், கு.வெங் கடாசலம், ஆனைமலை வட்டாட்சி யர் ரேணுகா தேவி மற்றும் காவல்து றையினர் ஆகியோர் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். அதில், ஒரு மாத காலத்திற்குள் பழங்கு டியின மக்களுக்கான வீடுகள் கட்டு வதற்கும், சாக்கடை வசதிகள் ஏற்ப டுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இப்போராட்டத்திற்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றி யக் குழு உறுப்பினர் எஸ்.பவுலி னா தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகாச் செயலா ளர் வி.எஸ்.பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.தங்கவேல், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க தாலு காச் செயலாளர் எம்.சுரேஷ்குமார், தாலுகாத் தலைவர் லோகநாதன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கோவை மாவட்டச் செய லாளர் ஸ்டாலின் பழனிச்சாமி உள் ளிட்ட பழங்குடியின மக்கள் திரளா னோர் பங்கேற்றனர்.