-கோ.மகேஷ்வரன் கோபி, ஜன.25- கோபி அருகே உள்ள கொங் கர்பாளையத்தில் தூர்வாராத சாக் கடை பள்ளத்தால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்ட உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நேருவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். கொங் கர்பாளையம் ஊராட்சியில் கொழிஞ்சிகாடு பகுதியில் தொடங் கும் சின்னபள்ளத்தில் மழை காலத் தில் வனபகுதியிலிருந்து வரும் மழை வெள்ளம் செல்கிறது. இதில், ஓடைமேடு, சாவடிவீதி என கொங் கர்பாளையம் ஊராட்சியின் 700க் கும் மேற்பட்ட குடியிருப்புகளிலி ருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் முழுவதும் சின்னப்பள்ளத் தில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் முழுவதும் நேருவீதியில் உள்ள சின்னப்பள்ளத்தில் கலந்து செல் கிறது. இந்நிலையில் சாக்கடை கழிவு நீர் செல்லும் சின்னப்பள்ளம் ஓடையை கடந்த ஐந்து ஆண்டுக ளாக தூர்வராததால் நேருவீதி பகு தியில் ஆங்காங்கே சாக்கடை கழிவு நீர் தேங்கி குட்டைகளாக மாறி கொசு உற்பத்தி நிலையமாக மாறி யுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தேவராஜ் என்ற இளைஞர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அப்பகுதி யில் சின்னப்பள்ளத்தை தூர் வாராத தால் குடியிருப்புகளில் அடிக்கடி பாம்புகள் புகுந்து பொதுமக்களை அச்சுருத்தி வருகிறது. இதனால் இரவில் குழந்தைகளை வைத்து கொண்டு சரியாக தூங்க முடிவ தில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். மேலும், பிள்ளையார் கோவில் பின்புறம் செல்லும் வழிதடத்தி லிருந்து நேருவீதிக்கு வாகனங்க ளில் செல்ல பல ஆண்டுகளாக பாலம் அமைத்து கொடுக்க வேண்டி கோரிக்கை விடுத்து வரு கிறோம் ஆனால் ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்வித நட வடிக்கையும் எடுக்க வில்லை. இத னால், நேருவீதிக்குள் அவசர கால வாகனங்கள், கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு கொங்கர்பாளையம் ஊராட்சி நேரு வீதி அடிதட்டு மக்களின் கோரிக் கையை நிறைவேற்றி சின்னப்பள் ளம் ஓடையை தூர்வாரி சுகாதார நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி கூறுகையில், நேருவீதி வழியாக செல்லும் சின்னப்பள்ளம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாராத தால் கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதியின் சாக்கடை நீர் முழுவதும் சின்னப்பள்ளத்தில் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது மகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதே பகுதியில் பலரும், காய்ச்சல், வயிற்றுப் போக்கு காரணங்களால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே சின்ன பள்ளத்தை தூர்வாரி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, நேருவீதி பகுதியில் செல்லும் சின்னப்பள்ளம் ஓடையில் தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வேண் டும். அண்ணாமார் கோவில் எதிரே ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து கொடுக்க ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.