தாராபுரம், ஆக.30 - தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்ப குதிகளில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தாராபுரத்தில் இருந்து தளவாய்பட்டி ணம் வழியாக உடுமலை மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு ஆகிய பகு திகளுக்கு பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினமும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல் கின்றன. அதேபோல கொளத்துப்பாளையம் வழியாக முலனூர், கருர் சாலையில் நூற்றுக் கணக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக இந்த சாலைகளின் ஒரங்களில் கோழிக்கழி வுகள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கள், கட்டட கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகை யான குப்பைகள் சாலை ஓரங்களில் கொட்டப் படுவது வாடிக்கையாகி உள்ளது. இதனால் சாலையோரங்களில் திடீர் குப்பைமேடுகள் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அந்த கழிவுப் பொருட் கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழும்போது விபத்துகள் நடைபெற வாய்ப் புள்ளது. நாய் உள்ளிட்ட விலங்குகள் குப்பை களை கிளறுவதாவல் சாலைகளில் குப்பை கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவ தோடு சுற்றுச்சூழல் மாசடையும் அபாயம் ஏற் பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பை கழிவு பொருட்களை அகற்றுவதோடு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.