தருமபுரி, டிச.28- நூறுநாள் வேலை திட் டத்தில் வேலை மற்றும் சட்டப்படியான கூலி வழங்க வேண்டும் என மாற்றுத்திற னாளிகள் சங்க அரூர் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தின் அரூர் வட்ட 4 ஆவது மாநாடு தனியார் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மா நாட்டிற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் சங்க கொடியேற்றி வைத்து சிறப்புரையாற் றினார். இதில், மாநில துணைத்தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இம்மாநாட்டில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கு வேலை மற்றும் சட்டப்படியான கூலி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க அரூர் வட்டத் தலைவராக கே.காந்தி, செயலாளராக சி.பழனி, பொருளாளராக சக்தி உள்ளிட்ட 10 பேர் கொண்ட வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.