districts

img

கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு

உதகை, மே 29- பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி  நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது.  நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர்  பகுதியில் செவ்வாயன்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று  தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று காலை 8  மணி அளவில் சம்பவ இடத்தை பார்வை யிட்டு கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த னர். ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியு டன் குட்டி யானையை மீட்கும் முயற்சிகள்  நடைபெற்று வந்தன. அது முடியாமல் போன தால் இரண்டாவதாக இன்னொரு பொக் லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு, சுமார்  8 மணி நேரத்துக்கு பிறகு யானை மீட்கப்பட் டது.

;