தருமபுரி, ஜன.25- தொப்பூர் அருகே உள்ள தொப் பையாறு அணை கால்வாய் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள தொப்பையாறு அணை மலைகளுக்கு நடுவே அமைந் துள்ளது. இப்பகுதியானது தரும புரி, சேலம் ஆகிய மாவட்ட எல்லை யாக உள்ளது. இணையின் மறுகரை யில் காடையாம்பட்டி தாலுகா, வேப்பிலைப்பட்டி பஞ்சாயத்துக் குட்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி முழுவதும் மலை கிராமங்களாக உள்ளது. எட்டால் காடு, கொள்ளங்குட்டை, கீழ்கொட் டாய், அல்லன்கொட்டாய், சொக்க லான்கொட்டாய், ஏக்கோவில் உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங் களில் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடியின மக்கள் பொது போக்குவரத்திற் கும், தங்கள் விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகள், தானி யங்களை சந்தைப்படுத்தவும், பெரிய அளவிலான வாகனங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்த டிராக்டர் உள்ளிட்ட எளிதில் வருவ தற்கு அகலமான சாலை வசதி சேலம் மாவட்டத்தில் இருந்து மட் டுமே உள்ளன. அருகிலுள்ள தரும புரி மாவட்டத்தில் இருந்து நேரடி சாலைகள் எதும் இல்லை. அதேநேரம், இப்பகுதி மக்கள் விளை பொருட்களை சந்தைப் படுத்துவதற்காக, தருமபுரி மாவட் டத்தையே அதிகளவில் நம்பியுள்ள னர். ஆனால், அவர்கள் அணை யின் மறுகரையிலிருந்து, தொப்பூர் வந்தடைவதற்கு தொப்பையாறு அணையின் கீழ் பகுதியில் 60 மீட் டர் நீளமும், 3 அகலமும் கொண்ட நடைபாதை மட்டுமே உள்ளது. இவர்கள் நேரடியாக சாலை வழி யாக பயணம் செய்து வர வேண்டும் என்றால், சுமார் 8 கிலோ மீட்டர் வரை சுற்றி வரும் நிலை உள்ளது. இத னால், தொப்பையாறு அணையின் கீழ் பகுதியில், 3 அடி அகலம் உள்ள நடைபாதை மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என அப் பகுதி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.