கோடைக்காலத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்க கோரிக்கை உடுமலை, மார்ச் 10- உடுமலை வட்டாரத்திற் குட்பட்ட கிராமங்களில் குடி நீர் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏற்க னவே பயன்பாட்டில் இருந்து தற்பொழுது பயன்படுத்தா மல் பழுதடைந்து காட்சிப் பொருளாக காணப்படும் ஆழ்குழாய் கிணறுகளை கோடைக் காலத்திற்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையாக எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குடிநீர் கேட்டு நாள்தோறும் ஒரு பகுதியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்வு கிடைக்காமல் சில கிராமங்களில் சாலை மறியல் போராட்டம் வரை நடத்தி யும், ஊராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் தேவைக்கு தண்ணீர் தர முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அதுவரை பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் பொதுக்குழாய்களில் விடப்பட்டதை நிறுத்தியதா கும். தற்பொழுது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்க ளுக்கு தேவையான தண்ணீர் வழங்க முடியவில்லை. மேலும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையிலேயே தண்ணீர் விநியோகிக்கப்படு கிறது. தற்பொழுது கிராமங்களில் புதிய வீட்டுமனைகள் அதிக மானதால் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளதே, குடிநீர் தட் டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இனிவரும் மாதங்களில் கடுமையான வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், பருவமழை இல்லாத காரணத்தில் அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற் பொழுது நிலவரப்படி இந்த இரண்டு தாலூகாப் பகுதிகளுக் கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திருமூர்த்தி அணை யின் நீர்மட்டம் 36 அடியாகவும், நீர்வரத்து 190 கனடியாக மட்டுமே உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு, பழுதடைந்து காணப்படும் ஆழ் குழாய் கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகளை கோடைக் காலத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.