உடுமலை, செப்.4- மலைவாழ் மக்களின் குழந்தை களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன் றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக் கள் கோரிக்கை வைத்துள்ளனர். மலைவாழ் மக்கள் குடியிருப்புக ளில் இருக்கும் பள்ளிக்கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள் ளன. இக்கட்டிடங்களை சீரமைக்க மறுக்கும் காரணம் தெரியவில்லை. மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்க அரசின் சார்பில் மக்களின் குடியிருப்பு பகுதியில் ஆரம் பப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கு முறையாக கட்டி டம் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் போவதால் மலைவாழ் மக்களின் குழந் தைகளின் கல்வி முழுமையாக மறுக்கப் படுகிறது. மேற்கு தொடர்சி மலையில் உடு மலை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட திரு மூர்த்திமலை, மேல்குருமலை, கீழ்குரு மலை, குழிப்பட்டி, மாவடாப்பு மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை மலைவாழ் மக் கள் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகி றார்கள். இம்மக்களின் குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்க திருமூர்த்திமலை, கீழ்குருமலை, குழிபட்டி மற்றும் மாவ டாப்பு பகுதியில் அரசு சார்பில் பள்ளி கட்டிடம் கட்டபட்டுள்ளன. திருமூர்த்திமலை தவிர மற்ற மூன்று இடங்களில் இருக்கும் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் உள்ளன. இங்கு வேலைக்கு வரும் ஆசிரியர்கள் அந்த பள்ளிக் கட்டிடத்தில்தான் தங்கி வேலை செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தங்குவதற்கு தனியாக பள்ளியின் அரு கில் கட்டிடம் உள்ளன. இந்த பள்ளிக்கு பல வருடங்களாக பெயருக்கு மட்டுமே மாதம் ஒரு முறை ஆசிரியர்கள் வரு வதாகவும், அவர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்று தருவது இல்லை என்று மலைவாழ் மக்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் குடியிருப்பு பகுதியில் தமிழக அரசின் சார்பில் மூன்று ஆரம்ப பள்ளிகள் கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை முறை யாக பராமரிப்பது இல்லை. மிகவும் சித மலைடைந்து காணப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த பின்பு கடந்த ஆண்டு உடுமலை ஒன்றிய அலுவலத்தில் இருந்து பொறியாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் மழைக்கு இடிந்த குழிபட்டி பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்தார்கள். அப்போது மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் இது போன்று கீழ் குருமலையில் பள்ளி கட்டி டம் மிகவும் ஆபத்தான நிலையில் உள் ளது என்றும், அந்த கட்டிடத்தையும் ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள் ளார்கள். எதையும் கண்டு கொள்ளாமல் மாவடாப்பு பகுதிக்கு சென்றவர்கள், தற் பொழுது வரை பள்ளி கட்டிடம் கட்ட நட வடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த மூன்று பள்ளிகளுக் கும் தனித்தனியாக ஆசிரியர்கள் உள் ளார்கள். இங்கு தினமும் தங்கி வேலை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் தங்க இடம் இல்லாமல் பெரும் துன்பத்தில் வேலை செய்து வருகிறார்கள். அங்கு படிக்கும் அனைத்து குழந்தைகளும் முறையாக கல்வி கற்காமல் ஆரம்பக் கல்வி முடித்து ஆறாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு செல்லும் போது அவர் கள் தொடர்ந்து கல்வி கற்க முடிவ தில்லை. இதனால் படிப்பை தொடர முடி யாமல் விட்டு விடுகிறோம் என்றார் கள். மலைவாழ் மக்களின் உரிமைகள் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட நிலை யில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மூலம் பல போராட்டங்கள் நடத்திய பிறகு தான் விவசாயம் செய்ய வனபட்டா தரப்பட்டது. இந்நிலையில் வரும் தலை முறையினர் கல்வி கற்க அரசு அனைத்து வசதிகளும் செய்து, தரமான பள்ளி கட்டி டம் மற்றும் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்து முறையாக கல்வி கற்றுத் தர வேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.