districts

img

திண்டுக்கல்லில் சிபிஎம் வாகனப் பிரச்சாரம்

திண்டுக்கல், ஜுன் 21- திண்டுக்கல் மாநகராட்சிக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் புத னன்று நடைபெற்றது.  முத்தழகுபட்டியில் துவங்கிய  பிரச்சாரத்தை கட்சியின் மாவட்  டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்  தம் துவக்கி வைத்தார். நகரச்செய லாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றி யக்குழு செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினரகள் வ.கல்யாணசுந்தரம், பி.ஆஸாத், கே.ஆர்.பாலாஜி, முகேஷ், சிபிஎம்  மாமன்ற உறுப்பினர்கள் ஜோதி பாசு, கே.எஸ்.கணேசன், மாரி யம்மாள் மற்றும் நகர்க்குழு  உறுப்பினர்கள் கிளைச்செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.  புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா, வீட்டுமனை வழங் கிட வேண்டும். திண்டுக்கல் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை கட்டமைப்பை நவீனப் படுத்த வேண்டும் என்பன உள்  ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.                   (ந.நி.)