தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து நாமக்கல், திருச் செங்கோடு அருகே வையப்பமலை மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.தேவராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று தருமபுரி மாவட்டம், இண்டூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டச்செ யற்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், பகுதிக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.