உடுமலை, ஆக. 8 - உடுமலை பகுதியில் பத்திரபதிவுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை, கணியூர் பத்திரப்பதிவு அலுவ லகத்தில் கடந்த ஆண்டு வரை நடைபெற்ற பத்திரபதிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பொது மக்க ளுக்கு சமூக வலைதளத்தின் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, போலி யான ஆவணங்கள் கொண்டு உடுமலை, கணியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடை பெற்ற பத்திர பதிவுகளை ரத்து செய்ய வேண் டும் என தமிழக அரசுக்கு புகார் தெரிவித்த ஆவண எழுத்தர் சிவசங்கர் உள்ளிட்ட சில எழுத்தர்கள் மீது திருப்பூர் மாவட்ட பதிவாள ருக்கு கடிதம் மூலம் புகார் தெரிவிக்கபட் டது. இதையடுத்து, ஆக.19 ஆம் தேதி திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலு வலகத்தில் விளக்கம் தர வேண்டும் என விசாரணை ஆணை தரப்பட்டுள்ளது, இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆவண எழுத்தர் சிவசங்கரி டம் கேட்டபோது, உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த ஆண்டு வரை போலி யான ஆவணங்கள் வைத்து பத்திரங்கள் பதிவு செய்துள்ளது குறித்து அரசுக்கு கடிதங் கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட சர்வே எண்கள் பத்திரப்பதிவு செய்ய முடி யாது என்று தெரிந்தும், சிலர் கோவில் நிலங்கள், நீர் நிலைகள், ஓடை புறம்போக்கு மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட வீட்டுமனைக ளில் அரசு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை சிலர் அரசு அலுவலகத்தில் தடை யில்லா சான்று பெற்றது போல் போலியான ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய் யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஏமாற் றம் அடையாமல் இருக்க விழிப்புணர்வு பிரச் சாரம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் நான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் பணம் பெற்றுக் கொண்டு பத்திரங்களை பதிவு செய்வதாக புகார் தெரிவிக்கபட்டுள்ளது. இப்பகுதியில் அரசு நத்தம் நிலம், கோவில் நிலம், நீர் நிலை கள் மற்றும் அரசு பயன்பாட்டிற்கு ஒதுக்கப் பட்ட நிலங்களை வாங்கியவர்களின் ஆவ ணங்களை சரி பார்க்கும்போது அரசு அலுவ லக சான்றுகள் மற்றும் சில பத்திரங்களில் வாரிசுகளுக்கு தெரியாமல் முறைகேடான ஆவணங்கள் கொண்டு கடந்த ஆண்டு வரை பதிவு செய்துள்ளனர். இது போன்ற பதிவு களிள் நடைபெற்ற தவறுகள் மக்களுக்கு தெரியாது. இடத்தை வாங்கிய பின் வங்கி கட னுக்கு செல்லும்போது தான் இடத்தில் இருக் கும் பிரச்சனைகள் தெரிய வரும். அரசு உத்தரவுப்படி நிலங்கள் அனைத் தும் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் ஆன் லைன் செய்யப்பட்டுள்ளது. வாங்கும் இடத் திற்கான வில்லங்கம் குறித்து பொதுமக்கள் முறையாக விசாரணை செய்து இடம் மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததைப் பிடிக்காதவர்கள் பொய்ப்புகார் தெரிவித்துள்ளனர், என்றார். உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்ப தற்கு சான்றாக, ஆண்டிய கவுண்டனூர் கிரா மத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான ஜம் புக்கல் மலைப்பகுதி நிலங்களை ஆள்மா றாட்டம் மற்றும் முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து பல புகார் வந்த நிலையில், வருவாய் கோட் டாட்சியர் விசாரணை செய்துள்ளார். மேலும் கணியூர் அலுவலகத்தில் முறைகேடாக பத்தி ரப்பதிவு செய்து உள்ளதாக கூறி தமிழ்நாடு விவசாய சங்கம் கடந்த வாரம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு பல கோடிகள் வருவாய் வரும் பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் முறை கேட்டால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள். இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை யாக உள்ளது.