திருப்பூர், பிப்.12- நடுநிலைப் பள்ளிகளில் பல ஆண்டுக ளாக காலியாக உள்ள இடைநிலை ஆசிரி யர் பணியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி திருப்பூர் மாவட்டச் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்டச் சிறப்பு பொதுக்குழு கூட் டம் காங்கேயத்தில் புதனன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜ் குமார் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் சுனில் குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், அருள்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெய லெட்சுமி, சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் பிரபு செபாஸ்டியன், மாவட்டப் பொருளாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்க ளுக்கு, அரசால் வழங்கப்படும் பாட நூல்கள் மற்றும் விலையில்லா பொருட்களை பள்ளி களுக்கே நேரடியாக வழங்க வேண்டும். ஹைடெக் லேப் ஏஐ பணியிடம் காலியாக இருக்கும் பள்ளிகளில், இஎம்ஐஎஸ் பணி களை ஆசிரியர்களே செய்ய வேண்டியுள் ளது. இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது. எனவே ஹைடெக் லேப் ஏஐ காலி பணியி டங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பல ஆண் டுகளாக காலியாக உள்ள இடைநிலை ஆசிரி யர் பணி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். மேலும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரி யர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும், ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்க ளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சிகள் வழங்க, கருத்தாள ராக (ஆர்பி) ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். வருமான வரி கட்டியது தொடர்பான படிவம் -16 ஐ தொடக்க, நடு நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டியது வட்டாரக் கல்வி அலுவலர்க ளின் பணியாகும். இப்பணிக்கென ஆசிரியர் களிடம் பணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.