தீக்கதிர் செய்தி எதிரொலி
தஞ்சாவூர், நவ.12- தீக்கதிர் செய்தி எதி ரொலியாக, சேதமடைந்த நிலையில் இருந்த முடச்சிக் காடு அரசு பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச் சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 132 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில், இரு தினங்க ளுக்கு முன் பள்ளி வளா கத்தில் நின்று கொண்டிருந்த முதலாம் வகுப்பு மாணவி நீவிஸ்ரீயின் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார். மேலும் கடந்த 1980 அன்று திறக்கப் பட்ட அங்கன்வாடி உள்ளிட்ட 3 பள்ளிக் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து பயன் பாடற்ற நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தையும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து தீக்கதிரில் திங் கள்கிழமை அன்று செய்தி வெளியானது.
அன்றைய தினமே சேது பாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோ விந்தராஜன், அந்தப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனடி யாக அந்த பழுதடைந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அதனை இடித்து அகற்ற உத்தர விட்டார். இதையடுத்து பழு தடைந்த நிலையில் உள்ள கட்டிடம் இடித்து அகற்றப் பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.