districts

img

புதிய கட்டடம் காட்சிக்காக பழைய கட்டடத்தில் வைத்தியம்

சேலம், ஜூன் 16- ஓமலூர் அரசு மருத்துவமனையில் பல  கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங் களில் சிகிச்சை அளிக்காமல், அறைகளை காலியாக வைத்துக்கொண்டு, பழுதடைந்த பழைய கட்டடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவது அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு ஓமலூர், தாரமங்கலம், காடை யாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் உள்ளவர்கள் பயன்படுத்தி வரு கின்றனர். நாள்தோறும், ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளி களாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி மதிப்பீட்டில் 30க்கும் மேற் பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட நவீன  வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் பெண்கள் பிரிவு மற்றும் பிரசவ வார்டாக செயல்பட்டு வந்தன.   இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது மற்றொரு இடத்தில் மூன்று அடுக்கு கட்டடம்  ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டன. இதை யடுத்து அந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த  பிரசவ வார்டு உள்ளிட்ட பெண்கள் வார்டு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.  ஆனால், முன்பு கட்டப்பட்ட கட்டடம் தற் போது வரை நீண்ட காலமாக மருத்துவ  அலுவலர் அலுவலகம் மட்டுமே இருந்த  நிலையில், மீதமுள்ள 40 ஆக்சிஜன் வசதி களுடன் கூடிய கட்டிடம் பயன்படுத்தாமல்  இருக்கின்றனர். அதேநேரத்தில், நீண்ட கால மாக ஆண்கள் பிரிவிற்கு கட்டடம் இல்லா மல் இடிந்து விழும் நிலையில் உள்ள ஓட்டு  கட்டடத்தில் இயங்கி வருகிறது. அங்கு  நோயாளிகள் சிகிச்சை பெற வசதி இல்லா மல் கழிவறை அருகேயும், தரையிலும் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  எனவே, உடனடியாக மருத்துவ அலுவ லர் அவரது அறையை வேறு இடத்திற்கு மாற்றி, இரண்டு மாடி கட்டடத்தை ஆண்கள்  பிரிவாக மாற்ற வேண்டும் என நோயாளிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.