ஈரோடு, செப்.21- அந்தியூர் பேரூராட்சியில் இறந் தவரின் உடலை வைத்து, மதநல்லி ணக்கதை அழிக்கும் வகையில் செயல்பட்டவர்களை கண்டிக்கும் வகையில், தகவல் பலகை அமைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சில ருக்கு பாராட்டுகள் குவிந்து வருகி றது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி, 3 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதியைச் சேர்ந்த வேதாம் பாள் என்பவர் கடந்த வெள்ளி யன்று மரணமடைந்தார். அவரின் இறுதி நிகழ்வு அந்தியூர் - பர்கூர் சாலையில் பேரூராட்சிக்கு சொந்த மான பொது மயானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இறந்தவர் கிறிஸ்து வர் என்பதால், உடல் அடக்க நிகழ் வானது கிறிஸ்துவ முறைப்படி நடந் தது. அதேசமயம், “கிறிஸ்துவ மதச் சடங்குப்படி அடக்கம் செய்ய அனு மதிக்க மாட்டோம்” என மத வேற்று மையை தூண்டி சில வகுப்புவாதி கள் பதற்றத்தை உருவாக்க முயன் றனர். இது பற்றிய தகவல் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் எஸ்.கீதா விற்குத் தெரியவந்தது. பின்னர் மத நல்லிணக்கத்தோடு அமைதிப் பூங் காவாக திகழும் அந்தியூரின் வர லாற்றில், முதல் முறையாக இது போல மதப்பதற்றத்தை உருவாக்கி மக்களிடையே வகுப்புவாத பிரிவி னையை உருவாக்க முயலும் செயல் களை முளையிலேயே களைய வேண்டியது பேரூராட்சி நிர்வாகத் தின் கடமை என்கிற வகையில் கீதா களமிறங்கினார். அதன்படி, “அந்தியூர் - பர்கூர் சாலை மயானமானது பொது மயா னம்; இங்கு யாரும் எவரும் இறுதி சடங்குகளை அவரவர் வழிபாடு முறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அரசு சார்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. இங்கு யாருடைய அடக்க நிகழ்வு களையும், மதரீதியான காரணத் தைக்கூறி மதப்பதற்றத்தை உரு வாக்க முயலும் எந்த தனிநபர் அல் லது அமைப்பாக இருப்பினும் அவர்கள் மீது உரிய சட்ட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று பேரூராட்சி சார்பில் எச்ச ரிக்கை வாசகங்கள் கொண்ட தக வல் பலகை வைக்கப்பட வேண் டும். மேலும், சர்ச்சை செய்ய முயன்ற சமூக விரோத கும்பல்கள் மீது காவல்நிலையத்தில் உரிய புகாரை பேரூராட்சி சார்பில் அளித்து, மதநல்லிணக்கத்தை காக்க வேண்டும் என சிபிஎம் கவுன் சிலர் கீதா தலையீடு செய்தார். அத னைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவ டிக்கை மேற்கொண்டு, பேரூராட் சியின் சார்பில் உரிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந் தியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் நட வடிக்கையை வரவேற்பதுடன், கீதாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.