districts

img

தவறான சிகிச்சையால் பெண் பலி

தருமபுரி, மார்ச் 28- மருத்துவரின் தவறான சிகிச்சை யால் பெண் உயிரிழந்ததாக கூறி உற வினர்கள் தருமபுரி அரசு மருத்துவ மனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், பையர்நத்தம் அருகே பூனையானூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27). இவரது கணவர் கோவிந் தராஜ். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இத னால் சூர்யா, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய் தார். அதன்படி கடந்த 25 ஆம் தேதி, பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சூர்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந் தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சூர்யாவின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை மேல் சிகிச் சைக்காக தருமபுரி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில் திங்களன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  இவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப கட்டுப் பாட்டு அறுவை சிகிச்சையின் போது  தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட தாக கூறி, தருமபுரி அரசு மருத்துவ மனை வளாகத்தில் சூர்யாவின் உற வினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தருமபுரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதைய டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.