districts

img

ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல், ஜூன் 27- ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் முறையாக வழங்க வில்லை என குற்றம்சாட்டி ராசிபுரம் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பணிப்புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி யில் தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மூலமாக 93 பேர் ஒப்பந்த பணியாளர்க ளாக பணியாற்றி வருகிறார்கள். துறையூ ரைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் உரிமை யாளராக செந்தில் என்பவர் உள்ளார். ஒப் பந்தப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.480 நிர்ணயம் செய்யப்பட்டு, பிடித்தம் போக ரூ.390 வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் தோறும் 8 முதல் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக 26ஆம் தேதி ஆகியும் இதுவரையில் ஊதியம் வழங்கப் படவில்லை. இதனால் குழந்தைகளின் பள்ளி  மற்றும் கல்லூரி செலவு, அன்றாட செல வுக்கு கூட செலவு செய்ய முடியாத நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. ராசிபுரம் நக ராட்சி நிர்வாகத்திடம், தனியார் எண்டர்பிரை சஸ் நிறுவனத்திற்கு உரிய தொகை வழங்கி யதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுவரை யில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைய டுத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் நகராட்சி தூய்மை அலுவலர் செல்வராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் வேலைக்கு திரும்பினர்.