districts

img

உதவித்தொகையை உயர்த்தி வழங்கிடுக

கோவை, டிச.14-  மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உத வித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஒரு கால் ஊனமுற்று கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு இலவச மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் வழங்க வேண் டும். மகாத்மா காந்தி ஊரக வேலை  உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் அனைவருக்கும் முழு ஊதியத் துடன் வேலை வழங்க வேண்டும். மாற் றுத்திறனாளிகளின் குடும்ப அட் டையை ஏஏஐ அட்டையாக மாற்றிக்  கொடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் தமிழகம் முழுவதும் செவ்வா யன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் புனிதா  தலைமை வகித்தார். இதில், திரளா னோர் கலந்து கொண்டு கைதா கினர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு  சங்கத்தின் கோவை மாவட்ட பொரு ளாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித் தார். இதில், பொள்ளாச்சி ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்ரமணியம் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தார். இதில், வட்ட தலைவர் கா.இளங்கோவன், ஒன்றிய செயலா ளர் கே.சுசிலா, பொருளாளர் ஏ.சரஸ் வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  கைதாகினர். பாலக்கோட்டில் மாவட்ட துணைத் தலைவர் எம்.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற  மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் செட்டி யப்பன், காரல் மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.எஸ்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூரில் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தலைமை யிலும், நல்லம்பள்ளியில் மாவட்ட நிர் வாகி இடும்பன் தலைமையிலும் நடை பெற்ற மறியலில் மாதம்மாள், துளசி, வெங்கடாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநி லப் பொருளாளர் கே.ஆர்.சக்கர வர்த்தி தலைமை வகித்தார். இதில்,  நிர்வாகிகள் விக்ரம், மாரியப்பன், சாமுண்டீஸ்வரி, சண்முகம், வாலிபர்  சங்க மாவட்ட தலைவர் ஆ.ஜீவானந் தம் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்ட செயலாளர் வி. கே.வெங்கடாசலம் தலைமை வகித் தார். இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.கனகராஜ், பொருளாளர் பி.ஹரிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அமலா ராணி, எம்.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திற னாளிகள் அனைவரையும் காவல் துணை ஆணையர் தலைமையில் காவலர்கள் கைது செய்தனர். மேட்டூரில் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப் பினர் ஜான் பெர்னான்டஸ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட  துணை செயலாளர் செ.கருப்பண் ணன், நிர்வாகிகள் சீனிவாசன், முத்து,  பிரான்சிஸ், மாதேஸ், ராஜேஸ்வரி, முனியன், மகேஸ்வரி, கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து  கொண்டனர். ஆத்தூரில் மாவட்டக் குழு உறுப்பினர் பாரதி தலைமை யிலும், எடப்பாடியில் மாவட்ட தலை வர் அம்மாசி தலைமையிலும் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் வடக்கு தாலுகா அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு  மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித் தார். இதில், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் காளி யப்பன், மாவட்ட துணைத் தலைவர் ஜார்ஜ் வர்கிஸ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் குப்புசாமி, கமலக்கண்ணன், லோகநாதன், பாண்டியன், ரோஸி, சின்னச்சாமி, சந்திரன், தங்கமணி, சிஐ டியு நிர்வாகிகள் ஜெகதீஷ், எஸ்.கே. குழந்தைசாமி, ஆர்.மணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தாராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சங்கத்தின் தாலூகா செயலா ளர் வீரக்குமார் தலைமை வகித்தார். இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க  பொருளாளர் சந்திரன், சிபிஎம் தாலுகா  செயலாளர் என்.கனகராஜ், சிஐடியு நிர் வாகிகள் பி.பொன்னுச்சாமி, மேகவர் ணன், சுப்பிரமணியன், கண்ணுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மாலினி தலைமை வகித் தார். இதில், மாவட்ட துணைத் தலை வர் குருசாமி, நிர்வாகிகள் பழனிசாமி, தம்புராஜ், அழகிரி, கார்த்தி, தமிழ் நாடு சிறுபான்மைக்குழு தாலுகா செய லாளர் லால், கூட்டுறவு வேளாண்மை சங்க இயக்குநர் சுந்தரம், மோட்டார் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுதா சுப்பிரமணி, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கனகராஜ், மாதர் சங்க சசிகலா, விவசாய சங்க தாலுகா செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோல் குன்னத்தூர் பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் நிர்வாகி வேலுமணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு

ஈரோடு கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் வீ.ராஜூ தலைமை வகித்தார். இதில், மாவட்ட உதவித் தலைவர் மாரி முத்து, நகர நிர்வாகிகள் கொங்குநதி, அம்மணி அம்மாள், செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டு கைதா கினர். பவானி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. என்.பாலு தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் என்.சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்தியூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சங்கத்தின் தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். இதில், மாவட் டக்குழு உறுப்பினர் முருகன், சிபிஎம் தாலூகா செயலாளர் ஆர்.முருகே சன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.வி.மாரிமுத்து உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். சத்தியமங்க லம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற மறியலுக்கு சங்கத்தின் செயலாளர் ராமதாஸ் தலைமை வகித் தார். இதில், சிபிஎம் தாலுகா செயலா ளர் விஜயகுமார், மாவட்டக்குழு உறுப் பினர் க.இரா.திருத்தணிகாசலம் உட் பட பலர் கலந்து கொண்டனர். பவானிசாகரில் சங்கத்தின் ஒன் றிய தலைவர் டி.சுப்பிரமணி தலைமை யிலும், புளியம்பட்டியில் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஏ.பி.ராஜூ தலை மையிலும், தாளவாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் (பொ) ஆ.சகா தேவன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சங் கத்தின் தாலுகா நிர்வாகிகள் ராயப்பா,  ராமண்ணா, சாம்ராஜ், நசீர், குப்பு,  தாயம்மாள் உட்பட 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு கைதாகி னர்.