சேலம், ஜன.17- பொங்கல் விழாவை முன்னிட்டு ஆத்தூரில் சிறிய குதிரைகளுக்கான ரேக்ளா போட்டி செவ்வாயன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையத்தில் பொங் கல் விழா கழகத்தின் சார்பில் வருடந் தோறும் ரேக்ளா குதிரைப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதனைய டுத்து, திமுக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலை மையில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 17 சிறிய குதிரைகள் கலந்து கொண்டன. மேலும், ஆத்தூர் உடையார்பாளையத்திலிருந்து கொத் தம்பாடி வரை 17 குதிரைகள் சென்றன. குதிரையை முந்தி செல்லவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளை ஞர்கள் தடுத்ததால், ரேக்ளா வீரர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும், ரேக்ளா போட்டியில் குதிரைகள் ஓட்டு வதற்காக மட்டுமே அனுமதி தர வேண் டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட் டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறிய குதிரைக் கான ரேக்ளா போட்டியில் கோவைச் சேர்ந்த நவீன் பிரதாப் முதலிடமும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த குதிரை இரண்டாமிடமும், திருச்சியைச் சேர்ந்த சாந்தி கருப்பன் மூன்றாமிடமும், அம்மா பேட்டையைச் சேர்ந்த ரத்தினவேல் நான் காமிடமும் பெற்றனர். இதன்பின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.