திருப்பூர், பிப். 27 - பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதிப் பதுடன், கார்ப்பரேட் வரியை அதிகரிக்கவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந் தபட்சம் மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஊத்துக்குளி மற்றும் தாராபுரத் தில் நடைபயணப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. இந்திய நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரக் கோரிக்கைகளை முன்வைத்தும், நாட்டு மக்களுக்கு எதிரான பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளை எதிர்த்தும் ஏப்ரல் 5ஆம் தேதி டில்லியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ள மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து இந்த இயக்கத்தை நடத்துகின்றனர். இந்த பேரணியின் நோக்கத்தை விளக்கி யும், மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவ சாயிகள் விரோத, மக்கள் விரோத கொள் கைகளை அம்பலப்படுத்தியும் மேற்கண்ட மூன்று அமைப்புகள் சார்பில் பிரச்சார இயக் கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகு தியாக ஊத்துக்குளி தாலுகாவில் ஞாயி றன்று நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில் தொடங்கிய இந்த நடைபயணத்துக்கு விவசா யிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.கந்த சாமி இந்த நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய விளைபொருட் களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்பு களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க் கக் கூடாது, பொது விநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் 14 அத்தியாவசியப் பொருட் களை வழங்க வேண்டும். வீடற்ற அனைவருக் கும் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப் பட்டது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சரஸ் வதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.மணியன், சிஐடியு நிர்வாகி கள் கே.பெரியசாமி, வி.கே.பழனிசாமி, ஆர். பழனிச்சாமி, வி.காமராஜ், கே.கண்ணை யன், சி.மகேந்திரன், சேட், கே.ஏ.சக்திவேல், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.பிரகாஷ், எம்.பழனிச்சாமி, ஆர்.கருப்பு சாமி, கே.எஸ்.ராமசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.மணி, ம.சத்தியமூர்த்தி, ஆர்.ரவிக்குமார், எஸ்.கோபாலகிருஷ்ணன், எஸ்.கே.பழனிச்சாமி உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் தொடங்கிய நடைபயணம் பூசாரிபாளையம், சென்னி மலைபாளையம் புதுக்காலனி, நீலாக்கவுண் டன்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், டிஎஸ்கே நகர், ஒத்தப்பனைமேடு, ஆதியூர், கருங்கல்மேடு, காந்திநகர் வழியாக குன்னத் தூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. தாராபுரம்: ஏப்ரல் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரம் அடுத்த கரையூரில் இருந்து தாராபுரம் அண்ணா சிலை வரை நடைபயண பேரணி திங்களன்று நடைபெற்றது. கரையூரில் துவங்கிய நடைப யண பேரணியை மாவட்டசெயற்குழு உறுப் பினர் சி.மூர்த்தி துவக்கி வைத்தார். கரையூர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மில் கேட், காளிபாளையம், மீனாட்சிபுரம், உப்புத் துறைபாளையம், கொளிஞ்சிவாடி, ஐந்து முனை சந்திப்பு, என்.என்.பேட்டை வழியாக அண்ணா சிலையை பேரணி வந்தடைந்தது. அங்கு மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் நடைபயணத்தை முடித்து வைத்து உரையாற்றினார். இதில், தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர். வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, மேகவர் ணன், செங்குட்டுவன், சத்தீஸ்வரன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.