districts

img

தூய்மை இந்தியா திட்டம் 12 ஊரகப்பகுதிகளின் ஆய்வில் 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை

எட்டாண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் தூய்மை இந்தியா திட்டத் தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் கழிப்பறை வசதிகளை ஏற் படுத்தியுள்ளோம் என பெருமிதம் பேசிய பிரதமர் மோடி மற்றும் சங் பரிவார் கூச்சல்கள் வெற்றுக்கூச்சல் கள் என்பது அம்பலமாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறைகளே இல்லாதது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு  முழுவதும் திறந்தவெளி கழிப்பறை பயன்பாட்டை குறைக்கும் வகை யில் கடந்த 2014-15 ஆம் நிதியாண் டில் ஒன்றிய அரசு சார்பில் தூய்மை  பாரத  இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தை அறி முகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில்,  2019 ஆம் ஆண்டிற்குள் கிராமங் களில் திறந்தவெளி கழிப்பிடங்கள்  இல்லாத நிலையை உருவாக்கு வோம் என சூளுரைத்தார். ஊரக பகுதி மட்டுமின்றி நகரப் பகுதிக ளில் கழிப்பறை வசதியில்லாத வீடு களுக்கு தூய்மை பாரத இயக்கத் தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் தனிநபர் இல்லக் கழிப்பறை கள் கட்டுவதற்கு வட்டாரம் வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப் பறைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரகப்  பகுதிகளில் தனிநபர் இல்ல கழிப் பறை திட்டத்தில் கழிப்பறைகள் கட்டு பவர்களுக்கு அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் மானியமும், நிதி பற்றாக் குறை உள்ளவர்களுக்கு வங்கி களில் கடன் வழங்க ஊரக வளர்ச்சித்  துறை சார்பில் பரிந்துரைக்கப்பட் டது. திறந்தவெளி கழிப்பிடம் இல் லாத நிலையை ஏற்படுத்தும் ஊராட் சிகள், ஒன்றியங்கள்,  மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு சார்பில் விருதுகளும் வழங்கப்பட் டது. கோவை மாவட்டத்தில் தனி நபர் இல்லக் கழிப்பறை திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 804 பயனாளி களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத கழிப்பறைகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டத் தில் 12 வட்டாரங்களிலும் கணக் கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், 20 ஆயிரத்து 9 வீடுகளில் கழிப்பறை இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக காரமடை வட்டாரத்தில் 3 ஆயிரத்து 781 வீடுகளில் கழிப்பறை வசதியே இல்லை. கழிப்பறை இல்லாத வீடு கள் அதிகரித்துள்ளதால் திறந்த வெளியிலேயே கழிப்பிடத்திற்கு செல்லும் அவலம் உள்ளது. இந்த ஆய்வு குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறு கையில், தூய்மை பாரத இயக்கத் தின் கீழ் ஆண்டுதோறும் கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப் பட்டு வாய்ப்புள்ளவர்களுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறைகள் கட்டிகொள்வதற்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப் படுகிறது. கடந்தாண்டு 495 வீடு களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் புதிய குடியிருப்புகள் உரு வாதல், வீடுகளின் எண்ணிக்கை அதி கரிப்பு போன்ற காரணங்களால் கழிப் பறை இல்லாத வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கிறது. கழிப்பறை இல்லாத 20 ஆயிரம் வீடுகளில் பல ருக்கும் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதியில்லை. இத னால் இவர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை கட்டிக்கொடுக்க இயலாத நிலை உள்ளது. இது போன்று இட வசதி யில்லாதவர்களின் பயன்பாட்டிற் காக சமுதாய கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன என்றனர். சுதந்திர தினம் என்று கொடி கொடுத்தீர்…. குண்டூசி கொடுத்தீர் – சட்டை எங்கே என்கிற கவிதை வரி ஆட்சியாளர்களின் அம்மனத்தை எப்போதும் தோலுரிக்கிறது.