districts

img

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியீடு

கோவை, அக்.13- உயிர் அமைப்பு சார்பில், சாலை பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குட்டி காவ லன் பாடத்திட்ட கையேட்டை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வெளியிட் டார்.  கோவையில் ஏற்படும் சாலை விபத்து களை தடுக்க மாவட்ட நிர்வாகம்,  மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. குட்டி காவலன் என்ற திட்டத்தின் ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, தலைக் கவசம் அணிவதன் அவசியம், விபத்தினால் ஏற் படும் பாதிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டு  விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயிர் அமைப்பு சார்பில் குட்டி காவலன் பாடத்திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி மாநகராட்சி கலையரங்கில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் உள்துறை  முதன்மை செயலர் அமுதா கலந்துகொண்டு  குட்டி காவலன் பாடத்திட்ட கையேட்டை  வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், வாகன ஓட்டிகளின் அலட்சியப்போக்கால் பெரும்பாலான சாலை விபத்துகள் நடை பெறுகிறது. ஓட்டுநர்களின் கவனக்குறை வால் 90 சதவிகிதம் விபத்துக்கள் நடைபெறு கிறது. தமிழ்நாட்டில் 100 சாலை விபத்துகளில் 25 பேர் இறக்கிறார்கள் என்றால், கோவையில் 100 சாலை விபத்துகளில் 30 பேர் உயிரி ழக்கின்றனர். தலைக்கவசம் அணியாததால், காரில் சீட் பெல்ட் அணியாதது இவைகள் தான் விபத்துக்கு முக்கிய காரணம். எனவே அனைவரும் சாலை விதிமுறைகளை கடை பிடித்து விபத்தில்லா மாவட்டத்தை உரு வாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி உட்பட நூற்றுக்கணக்கான  மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.