உயர் மின்னழுத்த கம்பத்துக்கு இடையே பொதுக் கழிப்பிடப்பணி: மக்கள் அச்சம்
உயர் மின்னழுத்த கம்பத்துக்கு இடையே பொதுக் கழிப்பிடப்பணி: மக்கள் அச்சம் திருப்பூர், மே 3 - திருப்பூர் மாநகராட்சி 41ஆவது வார்டு பெரியார் நகர் பகுதி யில் உயர் மின்னழுத்த கம்பத்துக்கு இடையே பொதுக் கழிப்பி டம் கட்டும் பணி நடைபெறுகிறது. மின் கசிவு, விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட திருப்பூர் மாநகராட்சி 41 ஆவது வார்டு பெரியார் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த பொதுக் கழிவறையை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர் வாகம் சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பழைய கழிவறைக்கு அருகாமையில், புதிதாக கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கழிவறையின் மத்தியில் உயரழுத்தம் மின்கம்பம் உள்ளது. மின் கம்பத்தை அகற்றி விட்டு கட்டிட பணி செய்வ தற்கு மாறாக, மின் கம்பத்தை அகற்றாமல் அதற்கிடையி லேயே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு திட்ட மிட்டு பணி தொடங்கப்பட்ட நிலையில் அதனை தவிர்த்து தற்போது புதிய இடத்தில் கழிவறை கட்டுமான பணி நடை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். கழிவறைக்கு மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதன் காரணமாக பொதுமக்கள் அச்சப்படுவதாகவும், தண்ணீர் பயன்படுத்தக் கூடிய அந்த இடத்தில் மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் கூறினர். எனவே, இந்த நிலையை கவனத்தில் கொண்டு மின் கம்பத்தை அகற்ற வேண்டும். இல்லையெனில் கழிவறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.
பாரதிதாசன் பிறந்தநாள் விழா
திருப்பூர், மே 3 – திருப்பூர் மங்கைபாரதி தகவல் மையத்தின் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு, தகவல் பதிப்பு மையத்தின் உரிமை யாளர் அ.கந்தசுவாமி தலைமை ஏற்று வரவேற் றார். மூத்த தமிழறிஞர் ம. வின்சென்ட்ராஜ் பாரதிதா சன் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள், பாடல்கள் குறித்து விளக்கிப் பேசினார். வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். கார்த்தி கேயசிவம் நன்றி கூறினார்.
தாராபுரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்
தாராபுரம், மே 3 - தாராபுரம் நகராட்சி பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: தற்போது கோடை காலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வறண்டுள்ளது. இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் தினசரி வழங்கப்பட்டு வந்த குடி தண்ணீர் மே 2ஆம் தேதி முதல் 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் 15 வார் டுகளுக்கு என குடிநீர் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 வார்டுகளாக பிரித்து வழங்கப்பட உள்ளது. அதே போல குடியிருப்பு பகுதியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுக ளில் உள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதே போல அமராவதி ஆற்றில் இருந்து நகராட்சி மூலம் விநி யோகம் செய்யப்படும் குடிதண்ணீரையும் சிக்கனமாக பயன் படுத்த வேண்டும். கடும் கோடை காலத்தை முன்னிட்டு இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தாராபு ரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை தீர்க்க அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க வேண் டும் என நகராட்சி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண் ணீர் திறக்கப்படும் வரை 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் அடுத்த 15 வார்டுகளுக்கு என மாறி மாறி தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் சிர மத்தை பார்க்காமல் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தல்
நாமக்கல், மே 3- பருவமழைக்கு முன்பு ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் புதனன்று முதல் அடுத்த 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப் பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். வியாழனன்று (இன்று) 12 மி.மீட்டரும், வெள்ளியன்று (நாளை) 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்த பட்சமாக 55 சதவிகிதமாகவும், அதிகபட்சமாக 85 சதவிகித மாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் ஆட்டுக் கொல்லி நோய் ஒரு முக்கிய நச்சுயிரி நோய் ஆகும். இந்த நச்சுயிரி ஆடுகளில் கடுமையான தொற்று நோயை ஏற்படுத்து கிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளில் இருந்து விழாக்கள் மற்றும் சந்தைகளில் மிக நெருக்கமாக மற்ற ஆடுகள் வைக்கப்படும் போது, அவற்றிற்கு பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது. புதிதாக வாங்கி மந்தைகளில் சேர்க்கப்படும் ஆடுகள் மூலமாகவும், ஆட்டுக்கொல்லி நோய் பரவும். திடீரென்று ஏற்படும் கடுமை யான காய்ச்சல், மிகவும் சோர்வடைதல், தீவனம் உட்கொள் ளாமை போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நோய்க்கான தடுப்பூசியை பருவமழைக்கு முன்னர் போட வேண்டும். முதலில் 4 மாதம் மற்றும் அதற்கு மேலான ஆடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை எல்லா ஆடுகளுக்கும் மறு தடுப்பூசி போடப்பட வேண்டும். இறுதி சினைப்பருவம் உள்ள ஆடுகள் மற்றும் பால் கொடுக்கும் ஆடுகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
ஒகேனக்கல்லில் மதுக்கடைகளை மூட உத்தரவு
தருமபுரி, மே 3- கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி, ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதியில் உள்ள மதுக்கடை களை மூட தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட் டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மே 10 ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடக மாநில எல்லையிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மதுபான கடைகள், மதுபான பார்களை மே 8 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை மூட தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் உள்ள தனி யார் ஓட்டல்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றில் உரிமை பெற்று செயல்படும் பார்களை மே 8 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் மூடிவைக்க உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு, மே 3- கனமழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரத்துப்பாளையம் அணையில் திங்களன்று காலை 6 மணியளவில் 3 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது. அப்போது அணைக்கு விநாடிக்கு 98 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 99 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப் பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செவ்வாயன்று இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு செவ்வாயன்று காலை 6 மணிய ளவில் விநாடிக்கு 617 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி இருந்தது. அணையிலிருந்து 346 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிக ரித்தது. இதற்கிடையே செவ்வாயன்று மாலை நிலவரப்படி சென்னிமலை பகுதியில் 88 மி.மீ மழையளவும், அணைப்பகுதியில் 126 மி.மீ மழையளவும் பதிவாகியது. நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரில் 1550 டிடிஎஸ் என்ற அளவில் இருந்த உப்புத் தன்மை வெள்ளத்தால் குறைந்து, புதனன்று காலை 980 டிடிஎஸ் என பதிவானது. ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், கரை யோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளர் மற்றும் அதிகாரி கள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
பணம், நகைகள் கொள்ளை: 3 பேர் கைது
கோவை, மே 3- கோவை, ராமநாதபுரம், கிருஷ்ணா காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (60) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரு கிறார். அதேபகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவ ருடன் அறிமுகமாகி, பின்னர் இருவரும் தொழில் செய்து வந்துள்ளனர். இதன்பின் வர்ஷினி தனக்கு தெரிந்த இடைதரகர்கள் எனக்கூறி அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் என மூன்று பேரை ராஜேஷ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி யன்று ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி மற்றும் அவருடன் பழகிய இடைத்தரகர்கள் ஆகி யோர் உணவு சாப்பிட்டுவிட்டு, ராஜேஷ் வரியை தூங்க வைத்துள்ளனர். இதன்பின் வர்ஷினி இரவு 11 மணிக்கு வந்து இரண்டரை கோடி ரூபாய் பணம், 100 பவுன் நகை ஆகிய வற்றை கொள்ளையடித்து விட்டு சென் றுள்ளார். இதையடுத்து காலை பீரோவை திறந்து பார்த்த ராஜேஷ்வரி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித் தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இவ் வழக்கில் தொடர்புடைய அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் திருவள்ளூர் மாவட் டத்தில் வைத்து கைது செய்தனர். இதன்பின் அவர்களிடமிருந்து ரூ.33 லட்சம் மற்றும் 31 பவுன் நகை மீட்கப்பட்டது. தொடர்ந்து இவ் வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகியோரையும் காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.
ரசாயனம் கலந்த 130 கிலோ மீன் பறிமுதல்
சேலம், மே 3- சூரமங்கலம் மீன்சந்தையில் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த ராசாயணம் கலந்த 130 கிலோ மீன்களை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியில் தினசரி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 16 மீன் கடைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு விற்கப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்து விற் பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீன் மார்க்கெட்டுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழுவினர் மீன் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பார்மலின் ரசாய னம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரசாயனம் பயன் படுத்தப்பட்ட 130 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீண்டும் இதேபோல தொடரும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, மே 3- கனமழை பெய்து வருவதால், ஒகேனக்க லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதி கரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு, கடந்த இரண்டு மாதமாக 500 கன அடி முதல் 1000 வரை மாறி மாறி குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலை யில், காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் ஆங் காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழ் நாடு மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலி குண்டுலுவில் தற்போது நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள் ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. கோடை விடுமுறை என்ப தால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் வந்து செல்லும் இந்த சூழ்நிலையில், நீர்வரத்து அதிகரித்து வருவதை சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளித் தும், மகிழ்ந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு பின்பு ஒகேனக்கல் காவிரி ஆற் றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனிம வள கொள்ளையை தடுத்த விஏஓ-வை கொலை செய்ய முயற்சி: போலீசார் விசாரணை
தருமபுரி, மே 3- பாப்பிரெட்டிப்பட்டி அருகே கனிம வள கொள்ளை தடுத்த கிராம நிர்வாக அலு வலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, மெனசி கிராம நிர்வாக அலுவல ராக இளங்கோ (40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி யிருப்பதாவது: கனிம வளக்கற்கள் கடத்தப் படுவதாக எனக்கு திங்களன்று இரவு 10:30 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மெனசி - குண்டல்மடுவு சாலையில் காளியம்மன் கோவில் அருகே மெனசியைச் சேர்ந்த ராகவன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கனிம வளக்கற்கள் கடத்தப்பட்டது. அதனை நான் தடுத்து நிறுத் தும் போது, டிராக்டரை என் மீது நேராக மோத முற்பட்டனர். நான் ஓரம் சென்று விட்டேன். இல்லையெனில் அவர்களது வண்டி மூலம் என்னை கொலை செய்து இருப்பார்கள். கடத்திய கற்கள் கோவிந்தராஜ் என்பவரின் நிலத்தில் கொட்டி வைத்து உள்ளார்கள். எனவே, மெனசி கிராமத்தில் இரவு நேரங் களில் கள்ளத்தனமாக கனிமவளக்கற்களை கடத்திச் சென்ற ராகவன் (25), தம்பி துரை (35) உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கனிம வளக்கொள்ளையர்கள் கிராம நிர்வாக அலுவலர்களை குறிவைத்து தாக்கு தல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வரு வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாராயம் பறிமுதல்
தருமபுரி, மே 3- அரூர் சிட்லிங்கில் உள்ள வேடியப்பன் கோவில் அருகே கோட்டப்பட்டி போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, அதி லிருந்தவர்களிடம் விசாரித் தனர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை சோதனை செய்ததில், லாரி டியூப்புகளில் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈச்சாங்காடு கிரா மத்தைச் சேர்ந்த வேலாயு தம் (42) என்பவரை கைது செய்தனர். மேலும், 500 லிட் டர் சாராயத்தையும் பறி முதல் செய்து, தப்பி சென்ற ஒருவரை தேடி வருகின்னர்.