districts

img

தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்

உடுமலை, அக்.15- உடுமலை அருகே தேவனூர் புதூர்  பகுதியில் பழமையான கோவில் அரு கில் தனியார் மதுபான கேளிக்கை விடுதி  கட்டப்பட்டு வருவதைத் தடுக்கக் கோரி  செவ்வாயன்று தேவனூர்புதூர் உடு மலை செல்லும் சாலையில் பொது மக் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். உடுமலை தேவனூர் புதூர் ஊராட்சி  அனுமந்தப்பட்டினம் என்ற பகுதியில் தனியார் மதுபான கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொது  மக்கள் கடந்த ஜூன் மாதம் திருப்பூர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  பழமையான கோவில் இருக்கும் பகுதி யில் மதுபானக் கடைகட்டுவதைத் தடுக்க வேண்டும் என தெரிவித்தி ருந்தனர். இந்நிலையில் கட்டடப் பணிகள் தற்பொழுது வரை நிறுத்தப்பட வில்லை. விரைவில் மதுபானக்கடை நடைமுறைக்கு வருவதாக தகவல் வந் துள்ளது. இதையடுத்து மதுபானக்க டைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வா யன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு  வந்த தளி காவல்துறை யினர், தனியார் மதுபானக் கடை இடத்தை மாற்றுவது குறித்து துறை  சார்ந்த அதிகாரிகளுடன் பேசி நல்ல  தீர்வு ஏற்படுத்துவதாக உறுதிய ளித்ததை அடுத்து, போராட்டம் முடி வுக்கு வந்தது.