சேலம், ஆக.6- ஆத்தூர் அருகே தனியார் கோழிப் பண்ணையால் ஏற்பட்ள்ள சுகாதார சீர்கேட்டிலிருந்து பாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா விற்குட்பட்ட பைத்தூர் கல்லுகட்டு, ராமமூர்த்தி நகர், மாரிமுத்து நகர் உள்ளிட்ட பகுதியில், பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். துலுக்கனுர், கல்லாநத்தம், கல்வராயன்மலை பகு திக்கு செல்ல வசிஸ்ட்டா நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும். ராமமூர்த்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழிப்பண்ணையில் நிலவும் சுகாதார சீர்கேட்டால், அதிக ளவில் உற்பத்தியாகியுள்ள ஈக்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களை பாதிக்க வேண்டும். அப்பம்மாசமுத் திரம் ஊராட்சிக்குட்பட்ட பாண்டியன் ரைஸ்மில் முதல் ஏகேஜி நகர் வரை உள்ள சேதமடைந்த சாலையை சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் அப்பகுதி பொதுமக் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.முரு கேசன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலை வர் ஏ.வி.சண்முகம், சிபிஎம் தாலுகாக் குழு உறுப்பினர்கள் தங்கம்மாள், வெங்கடாசலம், பிரபு, பெரியண்ணன் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக் கள் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, கோரிக்கைகளை நிறை வேற்றவிட்டால், ஆக.29 ஆம் தேதி யன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.