districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறை

உதகை, டிச.1- நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த மஞ்சூர் பகுதி யைச் சேர்ந்தவர் சக்தி (52). இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 24.4.2021 ஆண்டு அந்தப்ப குதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று பள்ளி சிறு மிகளை, இவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று, பாலி யல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியவர, உதகை ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்  பேரில் விசாரணை நடத்திய போலீசார், சக்தியை போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு  உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலை யில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வியாழனன்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதன்படி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திக்கு 21 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.4500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து குற்றவாளி சக்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கழிவுநீர் கால்வாயில் சிக்கிய மாணவனின் கால்

உதகை, டிச.1- நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள கமர்சியல் சாலை  நகரின் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்று வரு கின்றனர். இந்நிலையில், வியாழனன்று மதியம் முத் ்தொரை பகுதியைச் சேர்ந்த கிசோர் என்ற கல்லூரி மாண வன் அவ்வழியாக நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது,  கேசினோ சந்திப்பு அருகே சென்றபோது, கழிவு நீர் கால்வா யின் மேல் பொருத்தபட்டு, முறையாக பராமரிப்பு இன்றி இருந்த கம்பிகளுக்கு இடையே மாணவனின் கால் சிக்கிக் கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத் தினர், துரிதமாக செயல்பட்டு, கம்பியை வளைத்து மாண வனை மீட்டனர். இதன் பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் கால் சுமார் அரை மணி நேரம் கம்பியில் சிக்கிக் கொண்ட தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கால் உள்ளே  செல்லும் அளவுக்கு அதிக இடைவெளி உள்ள கம்பி களை மாற்றி சரியான அளவில் உள்ள கம்பிகளை பொறுத்த  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்கேட்டிங்: சேலம் மாணவி முதலிடம்

சேலம், டிச.1- ஹரியானா மாநிலம், குர்கானில் சிபிஎஸ்இ பள்ளிக ளுக்கு இடையிலான அகில இந்திய ஸ்கேட்டிங் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம், எம ரால்டுவேலி பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி  ச.மஹிதா கலந்து கொண்டு, முதலிடம் பிடித்து தங்கப் ்பதக்கம் வென்றார். இப்போட்டியில் மத்தியபிரதேச மாநில  மாணவி 2 ஆம் இடத்தையும், தில்லி மாணவி 3 ஆம் இடத் தையும் பிடித்தனர். தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி  ச.மஹிதாவுக்கு விளையாட்டு வீரர்கள், பெற்றோர், பள்ளி  நிா்வாகத்தினர் ஆகியோர் பாராட்டு தெரிவித்து வரு கின்றனர்.

ரேசன் பொருட்களுக்கு ஆன்லைன் மூலம் பணம்  செலுத்தும் புதிய வசதி அறிமுகம்

தருமபுரி, டிச.1- தருமபுரி மாவட்டத்தில், முதல் முறை யாக ரேசன் கடைகளில் வாங்கும் பொருட்க ளுக்கான பணத்தை, செல்போன் மூலம் ஆன் லைனில் பணத்தை செலுத்தும் வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில், கூட்டுறவு துறை யின் கீழ் 1,085 ரேசன் கடைகள் செயல்பட்டு  வருகின்றன. இந்த கடைகள் மூலம் பொது மக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில், ராகி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள 498 முழுநேர ரேசன்  கடைகள், 587 பகுதி நேர ரேசன் கடைகள்  உள்பட 1,085 ரேசன் கடைகள் மூலமாக 4  லட்சத்து 68 ஆயிரம் 595 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பொது மக்களின் வசதிக்காக, பல்வேறு இடங்க ளில் பகுதிநேர ரேசன் கடைகள் திறக்கப் பட்டு வருகிறது. தருமபுரி தாலுகா, அதகப் பாடி சின்னதடங்கம் செந்தில் நகரைச் சேர்ந்த  பகுதி மக்கள், ரேசன் கடைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வரு கிறது. சில நாட்களில் பொருட்கள் முழுவ துமாக கிடைக்காத சூழலும் இருந்து வரு கிறது. இதனால் நீண்ட நாட்களாக, பகுதிநேர ரேஷன் கடையை பிரித்துக் கொடுக்க வேண்டும் என செந்தில் நகர்  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதையடுத்து, அதகப்பாடி ரேசன் கடை யில் இருந்து 215 குடும்ப அட்டைகளை பிரித்து, செந்தில் நகரில் புதிதாக பகுதி நேர  ரேசன் கடை அமைக்கப்பட்டது. இந்த ரேசன்  கடையில் தருமபுரி மாவட்டத்தில் முதன்மு றையாக, பொதுமக்கள் வாங்கும் பொருட்க ளுக்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த,  க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பேடிஎம், கூகுள்பே மூலம் செலுத்தும் வசதி தொடங் கப்பட்டுள்ளது. இதனால் ரேசன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள், தங்க ளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி  வருகின்றனர். இச்சேவையால் ரேசன் கடை யின் ஊழியருக்கான சிரமம் குறைந்த துடன், வாடிக்கையாளர்களுக்கு சில்லரை  தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள் ளது. இந்த திட்டம் விரைவில் விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறவழிச்சாலை வேண்டாம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.1- சென்னிமலையில் புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை நகர  பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னிமலை நகர  பகுதிக்கு கனரக வாகனங்கள் வராமல்  காங்கேயம், பெருந்துறை செல்லும் படி புறவ ழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பாக அளவீடு செய்யும் பணி நடந்தது. இதில் பசுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட திரு வள்ளுவர் நகர் பகுதியில் புறவழிசாலை வந்து பசுவபட்டி பிரிவு அருகே காங்கேயம் பிரதான சாலையில் இணைக்கும் படி அள வீடு செய்துள்ளனர். அந்த பகுதியில் புறவழி சாலை வேண் டாம். பசுவபட்டி பிரிவு, வெப்பிலி பிரிவு அருகே தற்போது அதிக அளவில் விபத் துகள் நடக்கிறது. மேலும் புறவழிச்சாலை வந்தால் நாங்கள் அதிகம் பாதிக்கப்படு வோம் என கூறி திருவள்ளுவர் நகர், காம ராஜ் பதி குடியிருப்பு பகுதி, தட்டாங்காடு குடி யிருப்பு, பசுவபட்டி பிரிவு பகுதி பொது மக்கள் திரண்டு சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தூய்மைப்  பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

திருப்பூர், டிச.1- நீதிமன்ற உத்தரவுப்படி தூய்மைப் பணியாளர்களுக்கு  தினசரி ரூ.745 வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணை யாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 53 ஆவது வார்டு கவுன்சிலர் ர.மணிமே கலை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு உள்ளாட்சி ஊழி யர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவுட்சோர்சிங்கில் பணி செய்யக்கூடிய,  தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்க ளுக்கும், அரசாணை 2(டி) எண்.62 இன் படி, தினசரி ஊதியம்  வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாநகராட்சி யில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தினசரி ஊதி யமாக ரூ.745 வழங்க வேண்டும். குடிநீர் பணியாளர்களுக் கும், வாகன ஓட்டிகளுக்கும் ரூ.783 தினசரி வழங்க வேண்டும்.  தற்போது குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே நீதிமன்ற உத்தரவுப்படியும், நகராட்சியின் நிர்வாக இயக்குநர் உத்தரவுப்படி தினசரி ஊதியம் முறையாக வழங்க  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடைக்காரரைத் தாக்கிய இந்து முன்னணியினர்: கைது செய்ய  காங்கேயம் அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்

திருப்பூர், டிச.1-  காங்கேயத்தில் தள்ளுவண்டிக் கடையில் உணவருந்திவிட்டு காசு தரா மல் கடைக்காரரைத் தாக்கிய இந்து முன் னணியினரை உடனே கைது செய்ய வலி யுறுத்தி வரும் டிச.4ஆம் தேதி ஆர்ப்பாட் டம் நடத்த போவதாக, காங்கேயம் அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு  வெள்ளியன்று நடத்திய ஆலோசனைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள் ளனர். காங்கேயம் திருப்பூர் சாலை சாலை யோரத் தள்ளுவண்டிக் கடையில் உணவு உண்டு விட்டுக் காசு தராமல்  தாக்குதலை நடத்திய இந்து முன்ன ணியைச் சேர்ந்த சதீசு, நாகராசு ஆகிய இருவர் மீது காங்கேயம் காவல் துறை  வழக்குப் பதிவு செய்திருந்தும் இது வரை கைது செய்யவில்லை. மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்ன ணியைச் சேர்ந்த அனைவரின் மீதும்  வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண் டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் கடையை மீண்டும் அதே இடத்தில் வரும் டிச.4 ஆம் தேதி திறப்பு விழா நடத்துவது. காங்கேயம் காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல், வழக்குப்பதிவு செய்யப் பட்ட குற்றவாளிகளைக் கைது  செய்யா மல் இருப்பதைக் கண்டித்தும். தாக்கு தல் நடத்திய இந்து முன்னணியினரை  உடனடியாகக் கைது செய்யக் கோரி யும் வரும் டிச.4 ஆம் தேதி காங்கேயம் நகரப் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது என காங்கே யம் அமைதிக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மறும லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,  திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தற் சார்பு விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட அமைப் புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்புப் பணி

திருப்பூர், டிச.1- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற் றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு  கணக்கெடுப்புப் பணி புதனன்று  தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை யால் செயல்படுத்தப்படும் உரிமைகள்  திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிக ளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கப்பட் டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்  பணியாளா்களும், தமிழ்நாடு நகர்ப்புற  வாழ்வாதார இயக்க களப் பணியாளர்க ளும் தகவல் சேகரிக்கும் பணியை மேற் கொள்வார்கள். களப் பணியாளர்கள்  மூலம் பெறப்படும் தங்களது தகவல் கள் இக்கணக்கெடுப்புக்கென உரு வாக்கப்பட்டுள்ள பிரத்தியோகமான செயலியில் பதிவு செய்யப்படும். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும்  அனைத்து மாற்றுத் திறனாளிகள்,  அவர்களது பெற்றோர், பாதுகாவலர் கள் மாற்றுத் திறனாளிகள் குறித்த தக வல்களை இக்கணக்கெடுப்பில் ஈடுபட் டுள்ள களப் பணியாளர்களிடம் தயக்க மின்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

ரத்தக் கரையுடன் நின்றிருந்த கார்

கோவை, டிச.1- கோவை, உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக கார் ஒன்று நின்று கொண்டி ருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல றிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரை சோதனை யிட்டனர். அதில், கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பால முருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயு தங்களும், இரத்தக்கரையும் இருந்துள்ளது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பாலமுருகனின் மனைவி தீபா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும், கடந்த 17-ந்  தேதி அவர் திடீரென காணாமல் போனதும் தெரியவந்தது.  இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதி யைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர், காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலமுருகனின் கார் உக்கடம் பகுதியில் ரத்தக்கறையுடன் உள்ளதை, பெரம் பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த கோவை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மரணம்

சேலம், டிச.1- இளம்பிள்ளை அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்த நிலையில், அவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என உறவி னர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள் ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி யில் பி.கே.லைப் கேர் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர் பூபதி. மது அருந்து பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகை யில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு சந்திரசேகர் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சந்தேகத்திற்குரிய வகையில், மறு வாழ்வு மையத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக சந்திரசேகர் குடும்பத்தினர் காவல் நிலை யத்தில் புகாரளித்துள்ளனர். மேலும், அவ ரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என  உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரசே கர் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

குவாரி இயங்க பொய்யான சான்று

நாமக்கல், டிச.1- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோக் கலை எளையாம்பாளையத்தில், கல்குவாரி இயங்கி வருகி றது. இக்குவாரியால், இப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டு, பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று குவாரியை சுற்றியுள்ள கிரா மங்களில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கல்குவாரி அருகாமையில் வீடுகள் எதுவும் இல்லை எனக்கூறி, மீண்டும் குவாரி இயங்கு வதற்கு பொய்யான சான்றை விஏஓ பிரபு குமாரன் என்ப வர் பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சி யரிடம் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.

கல்லான மரம்: மாணவர்கள் வியப்பு!

ஈரோடு, டிச.1- பல மில்லியன் ஆண்டுகளாக பூமியில் புதைந்து கல்லான  மரம், ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள அரசு அருங் காட்சியகத்தில் அவ்வப்போது சிறப்புக் கண்காட்சி நடத் தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல மில்லியன் ஆண்டு களுக்கு முன் பூமியில் புதைந்த மரம், கல்லாக மாறியது. அதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கண்ட றிய காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் துவக்க விழா நிகழ்வு வியாழனன்று, அருங்காட்சிய காப் பாட்சியர் ஜென்சி தலைமையில் நடைபெற்றது. செங்குந் தர் கல்விக்கழகச் செயலாளர் சிவானந்தம் பங்கேற்று, கண் காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கல்லான மரத்தின் கண் காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி யினை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாா்வையிட்டனர். இதுகுறித்து அருங் காட்சியக காப்பாட்சியர் ஜென்சி கூறுகையில், பூகம்பம், நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதையுறும் மரங்கள், கல்லாக மாறுகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட் டம், திருவக்கரை பகுதியில் கிடைக்க பெற்ற அரியவகை புதை படிவமான கல்லாகிய மரம், ஈரோடு செங்குந்தர் பள்ளி ஆசிரியர் சாந்தமூர்த்தியால் அருங்காட்சியகத்துக்கு அன்ப ளிப்பாக வழங்கப்பட்டது. அந்த மரத்திலான கல், தற்போது  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பாா்த்து செல்கின்றனர், என்றார்.

அதிமுகவினரின் பேச்சுக்கு, திமுக நகர்மன்ற தலைவர் பதிலடி

சேலம், டிச.1- எடப்பாடி நகராட்சியில் கட்சிப் பாகு பாடு காட்டுவதாகக் கூறி அதிமுக உறுப் பினர்களின் பேச்சுக்கு, ஒரே கண்ணோட் டதில் அணுகுவதாக திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் தெரிவித் துள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி நகர் மன்றக் கூட்டம் தலைவர் பாட்ஷா தலை மையில், ஆணையர் முஸ்தபா முன்னி லையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய குடிநீர்க்குழாய் அமைத்தல், எல்இடி தெரு விளக்குகள் அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல் உள் ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறை வேற்றுவதற்கான தீா்மானம் குறித்து  அதிமுக - திமுக நகர்மன்ற உறுப்பி னர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகராட்சியில் தெரு விளக்கு களின் தரம் குறித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர் நாராயணன் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்துப் பேசிய ஆணையர் முஸ்தபா, ‘எடப்பாடி நக ராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளிலும் நவீன எல்இடி விளக்குகள் பொருத் தப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப  விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்படு கிறது. நிபுணர்களின் தர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது’ என் றார். மேலும், கட்சிப் பாகுபாடு பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துவதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்து நகர்மன்றத் தலைவர் பாட்ஷா பேசுகையில், எடப் பாடி நகராட்சிக்குட்பட்ட 30 வார்டு பகுதி களுக்கும் பாரபட்சம் இல்லாமல் ஒரே  கண்ணோட்டத்தில் அடிப்படை வசதி கள் மேற்கொள்ளப்படுகிறது. உறுப்பி னர்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் அடிப்படை வசதி தேவை ஏற்படும் நிலை யில், அவர்களுடன் தானே அப்பகு திக்கு சென்று ஆய்வு செய்து உடனடி யாக அதற்கு தீர்வு காணப்படும் என பதிலளித்தார்.