districts

img

பெருந்துறையில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் மனு

ஈரோடு, ஜூலை 29- பெருந்துறை-பெத்தாம்பாளையம் சாலையைக் கடந்து செல்லும் புறவழிச் சாலையில் விபத்துக்களைத் தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டுமென திங்களன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், பெருந்துறை பொது மக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் அளித்த மனுவில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் சாலை சேலம் - கோவை வழியாகச் செல்லும் புறவழிச்சாலையைக் கடந்து செல் கிறது. பெருந்துறையிலிருந்து கவுந்தப் பாடி வரை சுமார் 17 கிமீ க்கு இடைப் பட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்க ளில் இருந்து சிப்காட் உள்ளிட்ட பல் வேறு வேலைக்குச் செல்வதற்கும் இந்த  சாலையைத் தான் பயன்படுத்தி வரு கின்றனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற் பட்ட வாகனங்கள் புறவழிச்சாலை யைக் கடக்க வேண்டியது தவிர்க்க  முடியாததாகிறது. இதனால், விபத்துக் களும் தவிர்க்க முடியாததாகி வருகி றது.  எனவே, விபத்தினால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க ஒரே வழி மேம் பாலம் அமைப்பதுதான். இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மேம்பா லம் அமைத்து பொதுமக்களைப் பாது காக்க வேண்டும் என தெரிவித்துள் ளனர்.