தருமபுரி, டிச.3- நல்லம்பள்ளி அருகே சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக் காரனுர், குறுக்கு பள்ளம் உள்ளிட்ட ஐந்து கிராமப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் இருந்து தினந்தோறும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலை, மாணவர்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இல்லை. இதனால் சேலம் மாவட் டத்தில் இருந்து வரும் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்த சாலை கிராமங்களுக்கு செல்லும் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலை யாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட நிலை யில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது. தற்போது மண் சாலையாக உள்ளது.
தொடர்ந்து இதே சாலையில் அரசு பேருந்து களும் பயணித்து வந்தன. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடி யாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து வந்த வழித்தட எண் 24, 8, 10 அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழி யானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது. இப்பகுதியில் இருந்து மலையூர் காட்டிற்கு செல்ல சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட பழுதடைந்த சாலையால் கிராம பொது மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து வசதிக்காக தவித்து வருகின்றனர். மேலும், இச்சாலையில் கனரக வாகனங்கள், இருசக்கர வாக னங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் சாலை யில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை குறித்து பலமுறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் ஆகியோரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அனைவரும் வேறு வழியின்றி நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்த இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.